பொதுவாகவே மனித மனம் பின்னோக்கி செல்ல ஆசைப்படும். நமது பால்ய காலங்களுக்கு, நமது பள்ளிநாட்களுக்கு, பம்பரம், சில்லி விளையாடிய பொழுதுகளுக்கு திரும்பச் செல்ல நம் மனது அவ்வபோது ஆசைப்பட்டுக் கொண்டே இருக்கும். அது இயல்பு. இந்த இயல்புகளில் ஒன்றுதான் அவ்வபோது நமது பழைய புகைப்படத்தை பார்த்து நாமே பூரித்துப்போவதும், பின்பு அதை வெளியுலகிற்கு பகிர்வதும்.
சமூகவலைதளங்களில் பலரும் இதை செய்து வருகின்றனர். குறிப்பாக, பிரபலங்கள் இதை அதிகம் செய்வர். அந்த வகையில் தற்போது, தமிழக முன்னாள் அமைச்சர் ஒருவர் தனது பழைய புகைப்படத்தை ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பலர் இணையத்தில் பகிர்ந்து இதை யார் என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம் என்று பகிர்ந்துவருகின்றனர்.
உங்களுக்கு தெரிகிறதா? இவர் யாரென்று. இவர் வேறு யாருமில்லை தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்தான். இந்த புகைப்படம், 1981-ம் ஆண்டு TNPSC GROUP-1 காவல்துறை துணை கண்காணிப்பாளர் (DSP) தேர்விற்காக விண்ணப்பித்த போது எடுத்த புகைப்படம் என்று அவரே தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
1981-ம் ஆண்டு TNPSC GROUP-1 காவல்துறை துணை கண்காணிப்பாளர் (DSP) தேர்விற்காக விண்ணப்பித்த போது எடுத்த புகைப்படம் pic.twitter.com/9OG3ClJqgE
— DJayakumar (@offiofDJ) October 2, 2022
இதையும் படிங்க: இங்க மட்டும் இல்ல.. எங்க போனாலும் வைரல் தான்! அண்ணாமலை