தீபாவளி திருநாளை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி திருநாளுக்கு தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கமான ஒன்று. ஆனால், நடப்பாண்டில் தீபாவளிக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் இன்னும் போனஸ் குறித்த அறிவிப்பு எதும் வெளிவரவில்லையே என்ற எண்ணம் அரசு ஊழியர்கள் மத்தியில் நிலவி வந்தது.
இந்நிலையில், தற்போது இந்த வருடத்திற்கான தீபாவளிக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு 10% தீபாவளி போனஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:300-க்கும் மேற்பட்ட மையங்களில் கணினி வழியில் தொடங்கிய ஆசிரியர் தகுதித்தேர்வு!
அதாவது, அரசின் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை என மொத்தம் 10% போனஸ் வழங்க தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த போனஸ் அறிவிப்பு குறித்து ஆதரவாகவும், எதிராகவும் அரசு ஊழியர்களிடத்தில் இருந்து விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.