நடிகர் விக்ரம் திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ள நிலையில், நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் விக்ரம் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் வந்தது.
இந்நிலையிர், துருவ் விக்ரம் தனது சமூகவலைதள பக்கத்தில் தனது அப்பா விக்ரம் உடல்நிலை குறித்து பதிவிட்டுள்ளதாவது :
“அன்பான ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகளே, அப்பாவுக்கு இலேசாக நெஞ்சுவலி ஏற்பட்டது. அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துகொண்டார். அப்பாவுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. மாரடைப்பு ஏற்பட்டதாக வெளிவரும் தகவல்கள் எங்களை வேதனைக்கு உள்ளாக்குகிறது.
இந்த நேரத்தில் அப்பாவுக்கும், எங்கள் குடும்பத்துக்குமான தனியுரிமையை அனைவரும் அளிக்கவேண்டும் என்று கேட்டுகொள்கிறோம். நம்முடைய சியான் தற்போது நலமாக உள்ளார். இன்றே அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பவும் வாய்ப்பிருக்கிறது.” என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
விக்ரம் நடிப்பில் வெளிவந்த கோப்ரா திரைப்படம் அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே படுகொலை