விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்பட குழுவினருக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான், வாரிசு. ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், குஷ்பு, ஷ்யாம் உட்பட பெரும் நட்சத்திர பட்டாளங்களே நடித்திருக்கும் இத்திரைப்படத்தை, பிரபல இயக்குநர் வம்சி இயக்குகிறார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார்.
சமீபத்தில் வாரிசு திரைப்படத்திலிருந்து இசையமைப்பாளர் தமனின் இசையில் வெளிவந்த ‘ரஞ்சிதமே’ பாடல் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இப்பாடல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், வாரிசு படக்குழுவுக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பில் முன்அனுமதி பெறாமல் 5 யானைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது குறித்து வாரிசு படக்குழுவினர் 7 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டுமென்றும் விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வாரிசு திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருமண தேதியை அறிவித்த கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் ஜோடி..