Monday, April 29, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ரஜினியை நேரில் சந்தித்த பெரிய பழவேட்டரையர்! வைரலாகும் புகைப்படங்களும், பின்னணியும்

    ரஜினியை நேரில் சந்தித்த பெரிய பழவேட்டரையர்! வைரலாகும் புகைப்படங்களும், பின்னணியும்

    நடிகர் ரஜினிகாந்தை, நடிகர் சரத்குமார் சந்தித்து அவரை பாராட்டியதற்காக நன்றி தெரிவித்துள்ளார். 

    பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான், பொன்னியின் செல்வன். 

    இரு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது. 

    தொடக்கத்தில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதைமாந்தர்களை அவ்வபோது போஸ்டராக இணையதளத்தில் படக்குழு வெளியிட்டு வந்தது. அதையடுத்து, வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்றன.

    இதையும் படிங்க:பிரபல காமெடி நடிகரின் மகன் திருப்பூர் மாவட்ட சப் கலெக்டர்! இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்

    இதனை தொடர்ந்து, சென்னை நேரு மைதானத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற அச்சமயத்தில் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. பொன்னியின் செல்வன் பிரபலங்கள் செய்த புரொமோஷனும் நன்றாகவே மக்களிடன் சென்று சேர்ந்தது. 

    மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்குகளில் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வெளிவந்தது. பல திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் காட்சிகளுக்கு முன்பாக செண்டை மேளங்களுடனும், ரசிகர்களின் ஆடல்பாடலும் இடம்பெற்றிருந்தது. மேலும், திரைப்படம் வெளியானதிலிருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

    இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தைப்பார்த்த பின் நடிகர் சரத்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நடிகர் ரஜினி அவரை வாழ்த்தியுள்ளார். இந்நிலையில் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் சரத்குமார், ரஜனியை நேரில் சந்தித்துள்ளார்.

    இது குறித்து சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, 

     “அன்பு நண்பர் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் “பெரிய பழுவேட்டரையர்” கதாபாத்திரம் ஏற்று நடித்த என்னை அலைபேசியில் அழைத்து ஆத்மார்த்தமாக பாராட்டியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்றைய தினம் அவரை நேரில் சந்தித்ததில் இனிய தினமாக நாள் துவங்கியது. எனது பணிகள், மகள் வரலட்சுமியின் பணிகள், திரைத்துறை வளர்ச்சி மற்றும் பொதுவான கருத்துகளை பகிர்ந்து காபியுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட உரையாடலில் இருவருக்கும் இடையேயான நட்பினை எண்ணி நெகிழ்ந்தேன்” என பதிவிட்டுள்ளார். 

    பொன்னியின் செல்வன் வசூலில் பல சாதனைகளை நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....