நேற்று நடைபெற்ற புரோ கபடி போட்டியின் ஆட்டத்தில் உத்தரபிரதேச யோதாஸ் அணி 10 புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புரோ கபடி போட்டியின் 9-ஆவது சீசன் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி டிசம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், புரோ கபடி போட்டியின் நேற்றைய ஆட்டங்களில் உத்தரபிரதேச யோதாஸ் மற்றும் யு மும்பா, பாட்னா பைரேட்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் போன்ற அணிகளுக்கு இடையேயான ஆட்டங்கள் நடைபெற்றன.
இந்த ஆட்டங்களில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 32-26 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது. இதையடுத்து, பாட்னா பைரேட்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் இடையே நடைபற்ற ஆட்டத்தில், 40-34 என்ற புள்ளி கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸ் வெற்றி பெற்றது.
மேலும், உத்தரபிரதேச யோதாஸ் மற்றும் யு மும்பா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் 38-28 என்ற புள்ளி கணக்கில் உத்தரபிரதேச யோதாஸ் வெற்றிபெற்றது.
மேலும், நாளை இரவு 7.30 மணியளவில் நடைபெறவுள்ள புரோ கபடி போட்டியில் மூன்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
அவையாவன;
- தபாங் டெல்லி மற்றும் புனேரி பல்தான்
- தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ்
- ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ்
கால்பந்து உலகக் கோப்பை; முன்னேறிய தென் கொரியா..வெளியேறிய கானா, உருகுவே