ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூரில் தொடங்கியுள்ள நிலையில் அவரை காண ஏராளமான ரசிகர்கள் படப்பிடிப்பு பகுதிக்கு வந்துள்ளனர்.
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த்தின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம்தான், ஜெயிலர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இதைத்தொடர்ந்து வெளிவந்த ஜெயிலர் பட முதல் பார்வை நல்ல வரவேற்பைப் பெற்றது.
மேலும், ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவலை ஜெயிலர் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த அறிவிப்பின்படி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் இந்தப் படத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இது திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்தது.
சமீபத்தில் ஜெயிலர் திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. இதைத்தொடர்ந்து, அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு ஹைதராபாத் சென்றனர். இந்நிலையில், தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூரில் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: நாட்டிற்காக வீர மரணம்: ராணுவ வீரர்கள் மத்தியில் மறக்க முடியா வலியை ஏற்படுத்திச் சென்ற “ஜூம் நாய்”…!
குறிப்பாக, கடலூர் – புதுவை எல்லையில் தென்பெண்ணை ஆற்றில் அமைந்துள்ள அழகியநத்தம் பாலம் பகுதியில் இந்த படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. ரஜினிகாந்த் நடித்த சண்டை காட்சிகள், மற்றும் வாக்கிங் காட்சிகள் இந்த பாலத்தில் படமாக்கப்பட்டு வந்தன.
அச்சமயத்தில், ஏராளமான ரசிகர்கள் இந்த பாலத்திற்கு ரஜினியை காண்பதற்காக வந்தனர். ஆனால், ஒரு கிலோமீட்டருக்கு முன்பே காவல்துறையினர் ரசிகர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், ரசிகர்கள் ரஜினியை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
Thalaivar walking style #Jailer 🔥🔥🔥🤩🤩🤩pic.twitter.com/yNgovaOF8G
— JazPass (@UtdHub3) October 13, 2022
இருப்பினும், ரஜினி பாலத்தில் நடந்துகொண்டிருப்பதை வீடியோ எடுத்த ரசிகர்கள் இணையத்தில் அதை ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்த வீடியோவில் தலைவா தலைவா என்றபடியே ரசிகர்கள் தங்களது அன்பினை வெளிப்படுத்தினர்.