பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் நடிகர்கள் ரசிகர்களோடு திரைப்படம் பார்த்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் குதூகலத்தை ஏற்படுத்தி வருகிறது.
பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் திரைப்படம் உருவாகியுள்ள திரைப்படம்தான், பொன்னியின் செல்வன். இரு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது.
தொடக்கத்தில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதைமாந்தர்களை அவ்வபோது போஸ்டராக இணையதளத்தில் படக்குழு வெளியிட்டு வந்தது. அதையடுத்து, வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்றன.
இதையும் படிங்க:வெளியானது பொன்னியின் செல்வன் – செண்டை மேளம் முழங்க சோழர்களை கொண்டாட வந்த ரசிகர்கள்!
இதைத்தொடர்ந்து, சென்னை நேரு மைதானத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற அச்சமயத்தில் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. பொன்னியின் செல்வன் பிரபலங்கள் செய்த புரோமஷனும் நன்றாகவே மக்களிடன் சென்று சேர்ந்தது.
மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளிவந்துள்ளது. பல திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் காட்சிகளுக்கு முன்பாக செண்டை மேளங்களுடனும், ரசிகர்களின் ஆடல்பாடலும் இடம்பெற்றிருந்தது.
#PonniyinSelvanFDFS in #Vettri with #RajaRajaCholan @actor_jayamravi & his fans … Mass celebration organised by @shiyamjack …@LycaProductions @MadrasTalkies_ #Manirathnam #PS1 pic.twitter.com/qyIrKH61Xp
— Rakesh Gowthaman (@VettriTheatres) September 30, 2022
இந்நிலையில், பொன்னியின் செல்வனாக நடித்திருக்கும் ஜெயம் ரவி இன்று சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கில் ரசிகர்களோடு ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை காண அதிகாலையிலேயே வந்திருந்தார். அவரைக் கண்டதும் ரசிகர்கள் ஆனந்தத்தில் ஆர்ப்பரித்தனர். ஜெயம் ரவியும் பெரும் மகிழ்ச்சியுடன் ரசிகர்களை சந்தித்து ,ஆனந்தத்துடன் திரைப்படத்தை பார்த்தார்.
#Vikram in IMAX for FDFS of #PonniyinSelvan1 #PonniyinSelvanReview pic.twitter.com/tFDdwU6FKS
— Thimiru Pudichavan Gokul. (@GokulThimiru) September 30, 2022
அதேபோல, ஆதித்ய கரிகாலனாக நடித்திருக்கும் சியான் விக்ரமும் சென்னை ஐமேக்ஸ் திரையரங்கில் ரசிகர்களோடு திரைப்படத்தை கண்டுகளித்தார். மேலும், திரையரங்கை விட்டு வெளிவந்த அவர், ரசிகர்களிடம் திரைப்படம் எப்படியிருக்கிறது? திரைப்படத்தை பார்த்துவிட்டீர்களா’ போன்ற கேள்விகளை எழுப்பினார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் குதூகலத்தை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது, ரசிகர்ககளும் மிகுந்த ஆரவாரத்துடன் திரைப்படத்தை பார்த்து வருகின்றனர். கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படமே பொன்னியின் செல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.