காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் நேற்று நடைபயணத்தை தொடங்கினார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தற்போது பாரத் ஜோடோ யாத்திரை (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற ஒன்றை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தொடங்கியுள்ளார். இதன் நோக்கம் என்னவெனில் இந்தியாவை இணைக்க வேண்டும் என்பதே ஆகும். இந்த திட்டமானது, கடந்த புதன் (செப்டம்பர் -7) அன்று கன்னியாகுமரியில் துவங்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் நடைபயணத்தை நிறைவு செய்த அவர் நேற்று கேரளாவில் நடைபயணத்தை மேற்கொண்டார். அதன்படி, கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம், பாரசாலாவில் இருந்து நேற்று ராகுல் காந்தி தனது நடைபயணத்தை தொடங்கினார்.
இப்பயணத்தில், ராகுல் காந்திக்கு கட்சியினர் மட்டுமில்லாது பொதுமக்களும் வரவேற்பு அளித்தனர். கேரளாவில் அவர் மொத்தமாக 19 நாட்கள் நடைபயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். இதன்பிறகு அவர் கர்நாடாகவுக்கு செல்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.