ஜெயலலிதாவின் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரின் நினைவிடத்தில் சசிகலா மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (டிசம்பர் 5) தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிப்பட்டுள்ளது. வெவ்வேறு ஊர்களில் இருந்து ஏரளாமான தொண்டர்கள் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் கண்ணீர் மல்க கதறி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுகவினர் 4 அணிகளாக பிரிந்துள்ள நிலையில், அவர்கள் தனித்தனியே வந்து அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் இதில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சேப்பாக்கத்திலுருந்து பேரணியாக சென்று மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரின் நினைவிடத்தில் சசிகலா மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதேபோல் முன்னதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் ஜெயலலிதா நினைவிடத்தில் தனது ஆதரவாளர்களுடன் சென்று மரியாதை செலுத்தினார்.
ஜெயலலிதா நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் மலர் தூவி மரியாதை