ஏழைக்கான 10% இட ஒதுக்கீட்டால் பலன் பெறும் சமூகங்களை ஒருங்கிணைத்து பிரதமர் மோடிக்கு பாராட்டு விழா நடத்த உள்ளதாக தமிழக பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாகாக இந்த 10% இட ஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் கடந்த 12 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார். இருப்பினும் இதில் அதிமுக கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து இந்த தீர்ப்புக்கு மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதே சமயம் இதுகுறித்த பிரச்சாரங்களை நடத்த இருப்பதாக திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.
அதேபோல் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாசும், அக்கட்சியின் தலைவர் அன்புமணியும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக பாஜக நிர்வாகி ஒருவர், இந்த இட ஒதுக்கீட்டால் தமிழகத்தில் 60 க்கும் மேற்பட்ட சமூகங்கள் பலன் என்றும், ஆனால் பிராமணர் சமுதாயம் மட்டுமே பலன் பெறுகிறது போன்ற மாயத் தோற்றத்தை திமுக ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் திமுகவின் சமூக நீதி என்பது குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிரானதாக உள்ளதாகவும், 10% இட ஒதுக்கீட்டை கொண்டு வந்த பிரதமர் மோடிக்கு பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்து 10% இட ஒதுக்கீட்டால் பலம் பெறும் சமூகங்களின் தலைவர்களிடைம் பேசி வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க : 10,000 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 400 கோடி மதிப்பிலான வீட்டுவசதித் திட்டம்: தொடங்கி வைத்தார் முதல்வர்