சின்னத்திரையில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் மெகாத்தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கட்ட கதையை நோக்கி நகர்கின்றது.
மூர்த்தி தன் மூன்று தம்பிகளுடன் சேர்ந்து புதிய கடையை கட்டி வருகிறார். இன்னும் மூன்று நாட்களில் கடை திறப்பு விழா நடைப்பெறவிருக்கையில் தாசில்தார் எந்த காரணங்களையும் கூறாமல் புதிய கடையை அடைத்து சீல் வைக்கிறார். காரணங்கள் தெரியாமல் அலுவலகத்தில் காத்திருந்த மூர்த்தி, ஜீவா மற்றும் கதிரை தாசில்தார் மேலதிகாரி பார்க்க மறுக்கிறார். இதனிடையே கண்ணன் கதிர் மீது இருக்கும் கோபத்தில் அவர்களை பழி வாங்க இப்படி நடந்து கொள்கிறார் என்ற உண்மையை ஐஸ்வர்யா மூலம் மொத்தம் குடும்பத்திற்க்கும் தெரிய வருகிறது. ஒருபக்கம் ஜீவா, கதிர், கண்ணன் இந்த பிரச்சனைக்கு விடை தேடி அலைந்து கொண்டிருக்க, மூர்த்தி தர்ணாவில் ஈடுப்பட முடிவு எடுத்து விட்டார்.
இன்றைய எபிசோடில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் மூர்த்தி நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபடும் காட்சிகள் ஒளிப்பரப்பட்டன. அதாவது, மேலதிகாரியிடம் இருந்து முறையான பதில் கிடைக்காததால் மூர்த்தி ரோட்டில் அமர்ந்து போராட்டம் செய்கிறார். இதை கேள்விப்பட்டு அவருடன் வந்து தனமும் போராட்டம் செய்கிறார். இதைப்பார்த்த ஜீவா, கண்ணன், கதிருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
கடைக்கு ஒரு முடிவு தெரியும் வரை இந்த போராட்டத்தில் இருந்து எழுந்துக்க போவதில்லை என்கிறார் மூர்த்தி. அதே நேரம் இந்த விஷயம் மீனா அப்பாவுக்கு தெரிய வர உடனே அவர் மீனாவை எச்சரிக்கை செய்கிறார். அதாவது நமது குடும்ப மானம் முக்கியம் நீ இந்த போராட்டத்திற்கு செல்ல கூடாது என்கிறார். அதே நேரம் இந்த விஷயத்தில் எந்த உதவியும் என்னால் செய்ய முடியாது என கை விரிக்கிறார். கடையை சொன்ன தேதியில் திறக்க முடியாது, அதனால் சொந்தக்காரர்களுக்கு ஃபோன் பண்ணி தகவல் சொல்ல சொல்கிறார்.
இரவு நேரம் ஆகியும் யாரும் வீடு திரும்பாததால் ஐஸ்வர்யா மற்றும் முல்லையும் நகராட்சி அலுவலகத்திற்கு வர, அங்கு மூர்த்தி, தனம் படும் கஷ்டத்தை பார்த்து அவர்களும் தர்ணாவில் கலந்து கொள்கிறார்கள். சிறிது நேரத்தில் மீனாவும் கயல் பாப்பாவுடன் வந்து போராட்டத்தில் கலந்து கொள்கிறார். மொத்தத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மொத்த குடும்பமும் கடையை திறக்க போராட்டம் செய்து வருகின்றனர். வெற்றி யாருக்கு? புதுக்கடை திறக்கப்படுமா? போன்ற கேள்விகளுக்கு இன்னும் சில நாட்களில் விடை கிடைத்துவிடும்.