Sunday, March 17, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்ஊருக்குள் கூட்டம் கூட்டமாக சிங்கங்கள்; அச்சத்தில் மக்கள்!

    ஊருக்குள் கூட்டம் கூட்டமாக சிங்கங்கள்; அச்சத்தில் மக்கள்!

    குஜராத் மாநிலத்தில் இரவில் சிங்கங்கள் கூட்டமாக சுற்றும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    குஜராத் மாநிலத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நள்ளிரவு நேரத்தில் 8 சிங்கங்கள் கூட்டமாக உலா வந்த காணொளி, அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. 

    அந்தக் காணொளியில், சிங்கங்கள் கூட்டமாக செல்கின்றன. அதோடு அங்கு வாகனத்தின் வெளிச்சம் பட்டதும், அவை திரும்பிச் செல்கின்றன. இந்தக் காட்சிகள் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    இந்தக் காணொளியை இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அதில் அவர், “மற்றொரு நாள், மற்றொரு பெருமை, குஜராத் தெருக்களில் நடைப்பயிற்சி” என குறிப்பிட்டுள்ளார். 

    இதையடுத்து இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் பலரும் இது குறித்து தங்களின் விருப்பங்களையும் கருத்துகளையும்  தெரிவித்து வருகின்றனர்.

    இந்தக் காட்சி பார்ப்பதற்கு வித்தியாசமாக தோன்றினாலும் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.  

    மனைவி இறந்த துக்கம்; கணவர் செய்த செயல் – ஆவடியில் உணர்ச்சிகர சம்பவம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....