காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ‘நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் நண்பா’ என்று லியோ படக்குழு தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் படம்தான், லியோ. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நடிகர் விஜய்யுடன், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ் மற்றும் மன்சூர் அலிகான் போன்றோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுகளும் இணையத்தில் வைரலாகின. தற்போது, காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே, நேற்று காஷ்மீர், டெல்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில், நிலநடுக்கம் குறித்து லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சந்திரமுகி படத்தில் பங்களாவிற்குள் செல்லும் வடிவேலு பயந்து நடுங்கும் வீடியோவை பகிர்ந்து ‘நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் நண்பா’ என்று பதிவிட்டு இருக்கிறது.
மேலும் படத்தில் லோகேஷ்கனகராஜூடன் இணைந்து திரைக்கதை மற்றும் வசனத்தில் கவனம் செலுத்தும் ரத்னகுமார், ‘BLOOODY நிலநடுக்கம்’ என்று பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டுபிடிப்பு