Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்காத்து வாக்குல ரெண்டு காதல் எப்படி இருக்கு? பொது மக்கள் மற்றும் ரசிகர்களின் பார்வை இதோ!

    காத்து வாக்குல ரெண்டு காதல் எப்படி இருக்கு? பொது மக்கள் மற்றும் ரசிகர்களின் பார்வை இதோ!

    விக்னேஷ் சிவன் இயக்கிய, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியானது. இதில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம், வித்தியாசமான கதையை கொண்டது என்று முன்னோட்டத்தை பார்த்தே மக்கள் புரிந்துக் கொண்டாலும், மிகப் பெரிய இரண்டு நடிகைகள் சேர்ந்து நடித்திருப்பது எப்படி இருக்கும் என்று ஆவலை தூண்டியது என்றே கூறலாம். 

    மக்களும் ரசிகர்களும் படம் பார்த்துவிட்டு சொல்லிய கருத்துக்கள் இதோ…

    • படம் மிகவும் நன்றாக இருந்தது. மூன்று மணி நேரம் சென்றதே தெரியவில்லை. 
    • விக்னேஷ் சிவன், எதிர்ப்பார்த்த படி நன்றாக படத்தை இயக்கி உள்ளார். 
    • நல்ல பொழுதுபோக்கு திரைப்படமாக இருந்தது. விடுமுறை நாட்களில் இம்மாதிரியான திரைப்படங்களைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது. 
    • சமந்தாவும் நயன்தாராவும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். 
    • சமந்தாவும் நயன்தாராவும் சேர்ந்து வரும் காட்சிகளில், யாரை பார்ப்பது என்றே தெரியவில்லை. அவ்வளவு அருமையாக இருந்தது இவர்களின் நடிப்பு. 
    • கதீஜா (படத்தில் சமந்தாவின் பெயர்) வேற மாதிரி நடித்திருக்கிறார்கள். சமந்தாவுக்கு இன்னும் கூட அதிகமான காட்சிகளை கொடுத்திருக்கலாம் என்ற கருத்தையும் சிலர் முன் வைத்துள்ளனர். 
    • கண்மணி(படத்தில் நயன்தாராவின் பெயர்) நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. 
    • சில இடத்தில், இழுபறியாக சென்றாலும், எண்டர்டெயின்மெண்ட் என்பதால் அதெல்லாம் பெரிதாக தெரியவில்லை. 
    • அனிருத் இசையமைப்பு, புது விதமாக இருந்தது. எல்லாப் பாடல்களும் கேட்க ரசிக்க கண்களுக்கு விருந்தளித்தது. அனிருத்தின் 25 படத்தின் இசையமைப்பு மிக அழகாக இருந்தது. ‘டூ..டூ..டூ’ பாடல் மிகவும் பிடிதத்து. காட்சிகள் அனைத்தும் ரசிக்கின்ற வகையில் இருந்தது. 
    • விஜய் சேதுபதி, மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். 
    • நானும் ரவுடி தானுக்கு அடுத்து விஜய்சேதுபதி, இந்தப் படத்தில் வித்தியாசமான கதையில் நடித்தது மிக நன்றாக இருந்தது . 
    • முடிவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும், படம் முழுவதுமாக பார்க்க  நன்றாக இருந்தது. 
    • கேஜிஎப் போன்ற ஆக்க்ஷன் படத்தை பார்த்துவிட்டு, இப்படம் பார்ப்பதற்கு மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது என்றும் தெரிவித்தனர். 
    • சமந்தாவிற்காக தான் படம் பார்க்க வந்தோம். கதீஜாவாக வேறு தோற்றத்தில் அழகாக நடித்திருக்கிறார். 
    • சமந்தா மற்றும் நயன்தாரா இருவருக்கும் சமமான பங்கினை படத்தில் அளித்துள்ளனர்.   
    • முதல் பாதியின் கடைசி முப்பது நிமிடங்கள் மிக அருமை. 
    • நண்பர்களுடன் இப்படி மகிழ்ச்சியாக வந்து, இது போன்ற படத்தை பார்த்து செல்வது நன்றாக இருக்கிறது. 
    • காமெடி எப்போதும் போல படத்திற்கு ஏற்றவாறு நன்றாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்தனர்.
    • இன்று சமந்தாவின் பிறந்தநாள் என்பதால், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை ‘ஐ லவ் யூ டூ’  என்று ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ முறையில் தெரிவித்துக் கொண்டனர்.   

    இதையும் படிங்க; நயன்தாராவை ‘அடி அழகா சிரிச்ச முகமே ….’ என வருணித்த விக்னேஷ்சிவன் – ‘நான் பிழை’ பாடல் ஒரு பார்வை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....