Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இன்று வெறுநாள் அல்ல திருநாள் என நிறுபித்த அஜித்குமார் இரசிகர்கள்!

    இன்று வெறுநாள் அல்ல திருநாள் என நிறுபித்த அஜித்குமார் இரசிகர்கள்!

    எச்.வினோத் அவர்களின் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் இசையமைப்பில், போனி கபூர் அவர்கள் தயாரிக்க அஜித்குமார் நடிப்பில் இன்று வெளிவந்திருக்க கூடிய திரைபபடம்தான், வலிமை! 

    valimai the power

    “தனக்கு பிடித்தமான, தனக்கு கொண்டாட்டங்களை கொடுத்த, தனக்கு மகிழ்ச்சிகளை கொடுத்த ஒரு நடிகரை 932 நாட்களுக்கு பிறகு இன்றுதான் திரையில் பார்க்கிறேன்” – இவைதான் அஜித்குமார் அவர்களின் பெரும்பாலான ரசிகர்களின் மனநிலையாக இன்று இருக்கிறது. இந்த மனநிலை வெறுமனே வருவதல்ல, இதற்கு பின்பு பல உணர்வுபூர்வமான நிகழ்வுகள் ததும்பும்! பல திரையரங்குகளில் இன்று உணர்வுபூர்வமான ததும்பலை நாம் காண நேரலாம்!

    valimai fdfs

    நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் அவர்களின் நடிப்பில் வெளியாகி இருக்க கூடிய திரைப்படம்தான், வலிமை! வலிமை திரைப்படம் பற்றிய பேச்சு ஆரம்பித்தில் இருந்தே, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது ஆரம்பிக்க தொடங்கியது. எதிர்பார்ப்புகள் வெறுமனே எதிர்பார்ப்பு மட்டும் அல்ல அதனூடே அஜித்குமார் அவர்களை காண வேண்டும் என்ற ஆவலும் அன்பும் அடங்கியே இருக்கும்.

    வலிமை திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது வெறுமனே திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அல்ல. அவற்றுள் முக்கால் பங்கு இருப்பது அஜித்குமார் அவர்களை திரையில் காண வேண்டும் என்ற ஆவல்தான். அந்த ஆவல் இன்று பலருக்கு தனிந்திருக்கிறது!

    valimai

    இன்று அஜித்குமார் ரசிகர்களுக்கு வெறும் நாள் அல்ல திருநாள் என்பதை இணையதளத்தில் மட்டும் அல்ல, வலிமை திரைப்படம் ஒளிபரப்பாகும் எந்த திரையரங்குகளுக்கு சென்றாலும், அந்த திருநாளை காணலாம்.

    வலிமை திரைப்படம் இன்று வெளியானதை ஒட்டி படம் பற்றி நேர்மறையான விமர்சனங்கள் திரையுலகில் பரவிய வண்ணம் உள்ளன. 932 நாட்கள் காத்திருந்த அஜித்குமார் ரசிகர்களுக்கு வலிமை கொண்டாட்டமாக அமைந்ததாக திரைப்படம் பார்த்த ரசிகர்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருவதற்கும், வலிமை திருநாளை கொண்டாடி கொண்டிருப்பதற்கும் அஜித்குமார் ரசிகர்களுக்கு தினவாசல் சார்பாக வாழ்த்துகள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....