கடந்த நவம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் வசூல் ஆனதாக மத்திய நிதியமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.
நாட்டில் ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து 9-வது மாதமாக ஒரு கோடியே 40 லட்சத்தை தாண்டி இருக்கிறது. இதன்படி கடந்த நவம்பர் மாதம் ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் வசூல் ஆகியுள்ளது.
இதுகுறித்து நியதையமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய அரசின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.25,681 கோடியாகவும், மாநில அரசுகளின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.32,651 கோடி எனவும் மத்திய – மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.77,103 கோடி எனவும், செஸ் வரிவருவாய் ரூ.10,433 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுளள்து.
இது கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 1,31,526 கோடி ஜிஎஸ்டி வசூலான நிலையில், தற்போது 11 சதவீதம் அதிக ஜிஎஸ்டி கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டுக்கான ஒப்பிட்டு பார்க்கும்பொழுது, நவம்பரில் இறக்குமதி மூலம் கிடைத்த ஜிஎஸ்டி வருவாய் 20 சதவீதமும், உள்நாட்டு பரிவர்த்தனை மூலம் கிடைத்த வருவாய் 8 சதவீதமும் அதிகரித்துள்ளது.
மாநிலங்களை பொறுத்தவரையில், மராட்டிய மாநிலம் 21,611 கோடி ஜிஎஸ்டி வருவாயுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரையில், கடந்த நவம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டி 8,551 கோடி வசூல் ஆகியுள்ளது. அதே சமயம் புதுச்சேரியில் 209 கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகி இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
50 ஆயிரம் பேர் பங்கேற்கும் சர்வதேச பலூன் திருவிழா; நம்ம ஊர்ல எங்க நடக்கப்போகிறது தெரியுமா?