Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஉகாதி திருநாள் கொண்டாட்டம்; அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

    உகாதி திருநாள் கொண்டாட்டம்; அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

    தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் உகாதி திருநாள் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் உகாதி கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.

    முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், உகாதி திருநாளில் புத்தாண்டை கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட உடன்பிறப்புகளுக்கு எனதுநல்வாழ்த்துகள். அறுசுவை உணவோடு மகிழ்ச்சி பொங்க புத்தாண்டை வரவேற்கும் உங்களது இல்லத்திலும், வாழ்விலும் அந்த மகிழ்ச்சி என்றென்றும் நிலைத்திட நெஞ்சார வாழ்த்துகிறேன். விந்திய மலைக்குத் தெற்கே பரந்து வாழும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த நம்முடைய உறவும், ஒற்றுமையும் வலுப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உகாதி, குடி பத்வா, செட்டி சந்த் மற்றும் சைத்ரா நவராத்திரி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு, மக்களுக்கு, குறிப்பாக தமிழகத்தில் உள்ள தெலுங்கு, கன்னடம், மராத்தி, சிந்தி,மற்றும் இந்தி சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், இந்த மங்களகரமான விழாவில், நமது மதிப்பை பிரதிபலிக்கும் இரக்கம் மற்றும் ஒத்துழைப்புடன், நமது மகத்தான தேசத்தின் விரிவான எழுச்சிக்காக, வைராக்கியம், ஆர்வம், அர்ப்பணிப்புடன் நம்மை மீண்டும் அர்ப்பணிப்போம். இந்த பண்டிகைகள் நம் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் நல்லஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியை யும் எடுத்து வரட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தெலுங்கு வருடப்பிறப்பான உகாதிநல்வாழ்த்துகள். மேலும், இந்தநன்னாளில் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் என்றென்றும் நிலைத்திருக்க எனது நல்வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

    அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பிரம்மன் உலகத்தைப் படைத்த நாளாகக் கருதப்படும் உகாதி திருநாளைக் கொண்டாடி மகிழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். மனித வாழ்க்கையில் இன்ப, துன்பங்கள் மாறிமாறி வரும். அதை பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதை இத்திருநாள் நமக்கெல்லாம் உணர்த்துவதாக தெரிவித்துள்ளார்.

    பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் சகோதர, சகோதரிகளுக்கு உளமார்ந்த உகாதி வாழ்த்துகள். தமிழர்களுடன் மொழியால் வேறுபட்டிருந்தாலும் அவர்கள் உணர்வால் தமிழர்களின் சகோதரர்களாகவே வாழ்கின்றனர். தமிழக வளர்ச்சிக்கு அனைவரும் இணைந்து பாடுபடுவதற்கு இந்த நாளில் உறுதியேற்போம் என கூறியுள்ளார்.

    வெளியானது, 1947 டிரைலர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....