Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் - அதிர்ச்சியில் மக்கள்!

    கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் – அதிர்ச்சியில் மக்கள்!

    தொழிலாளர்கள் மூன்று பேர் கழிவுநீர் தொட்டியில், தவறி விழுந்து விஷவாயு தாக்கியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

    மதுரை மாவட்டம் நேரு நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் தொட்டியில் அடைப்புகளை சரி செய்யும் பணியில் மாடக்குளம் சேர்ந்த சிவகுமார், அலங்காநல்லூரைச் சேர்ந்த லட்சுமணன் மற்றும் சரவணன் ஆகிய மூவரும் ஈடுபட்டுள்ளனர். 

    அப்பணியின் போது, எதிர்பாராத விதமாக அவர்கள் மூவரும் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்துள்ளனர். இதனை அடுத்து, அவர்கள் அலறும் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர், தீயணைப்பு துறையினருக்கும் காவல் நிலையத்திற்கும் தகவலை தெரிவித்துள்ளனர்.

    தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், அவர்கள் மூன்று பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, சடலமாக லட்சுமணன் மற்றும் சிவக்குமாரை மீட்டனர். பின்பு மூன்று மணி நேரம் கழித்து சரவணக்குமாரை மீட்டுள்ளனர். 

    உடனே, மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனைக்கு அவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்த கார்த்திக் என்பவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவரையும் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுச்சென்று, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

    இதைத்தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, துணைமேயர் நாகராஜன் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தனர்.

    இந்த சம்பவத்திற்கும் ஒப்பந்த நிறுவனத்திற்கும் சம்மந்தம் இருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, ஒப்பந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சரியான வழிகாட்டுதல்கள் மற்றும் இரவு நேர பணிகளின் போது தேவையான முன்னேற்பாடுகள் இன்மையின் காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

    இரண்டு நாட்களாக தொடர்ந்து அவர்கள் மூவரும் கழிவுநீர் அடைப்பு பணியில் ஈடுபட்டு, இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தது அங்குள்ள மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    இதையும் படியுங்கள், தமிழகத்தில் தொடர்ந்து நிகழும் மின்வெட்டு; அவதியில் பொதுமக்கள்!

    தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு: இணையத்தை கலக்கும் மீம்ஸ்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....