Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைபரிதாபமாக இரண்டு குழந்தைகளுடன் இலங்கையில் இருந்து வந்த தமிழ்ப்பெண்!

    பரிதாபமாக இரண்டு குழந்தைகளுடன் இலங்கையில் இருந்து வந்த தமிழ்ப்பெண்!

    இலங்கையில் இருந்து தமிழக எல்லைக்கு படகு மூலம் மூன்று பேர் மிகவும் ஆபத்தான முறையில் வந்துள்ளனர். 

    இலங்கையின் கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக மக்கள், பசியில் வாடி வருகின்றனர். ஒரு வேலை உணவுக்கு கூட உண்ண முடியாமல் கடினப்படுகின்றனர். பல ஆயிரக்கணக்கில் பொது மக்கள் அனைவரும் ஒன்றுக் கூடி அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். என்ன செய்வது என்று அறியாத இலங்கை அரசு, பல நாடுகளிடம் கையேந்தி வருகிறது. மக்கள் தங்களின் கருத்தில் உறுதியாக நின்று பல்வேறு போராட்ட முழக்கங்களின் மூலம் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று போராட்ட களத்தில் இலங்கை காவல் துறையினரின் துப்பாக்கி சூட்டால் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

    வறுமையில் தவித்த மக்கள் சிலர், தமிழகத்துக்கு படை எடுத்து வருகின்றனர். இதுவரை, 10 குடும்பங்களை சேர்ந்த 39 பேர் தமிழகத்திற்கு இலங்கையில் வறுமை நிலையை சமாளிக்க முடியாமல் தமிழகத்திற்கு வந்தடைந்துள்ளனர். இவர்களிடம் விசாரித்ததில் இவர்கள், இலங்கையின் பொருளாதார சூழல் மோசமான நிலமையில் உள்ளதால் தான், இங்கு பிழைக்க வந்தோம் என்று தெரிவித்துள்ளனர். 

    இந்நிலையில், இன்று காலை மூன்று பேர் தமிழக எல்லையான தனுஷ்கோடி கம்பிபாடு பகுதிக்கு வந்துள்ளனர். இவர்கள் மூன்று பேரும் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மட்டக்களப்பு எனும் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்திருக்கிறது. கணவரால் கைவிடப்பட்ட பெண், தனது இரு குழந்தைகளுடன் மிகவும் ஆபத்தான முறையில் வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் வந்த படகிற்கு ரூபாய் இரண்டு லட்சம் கொடுத்தாக தெரிகிறது.  

    இவர்கள் வந்ததை அறிந்த கடலோர காவல் படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து இலங்கை அகதிகள் மூவரையும் மீட்டு கடலோர காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். பின்பு, மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமிற்கு கொண்டு சென்று தங்க வைக்கப்பட்டுள்ளனர். இனியும் அதிகமான இலங்கை மக்கள் தமிழகத்திற்கு படையெடுத்து வருவதாக செய்திகள் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....