சென்னை, பரங்கிமலை பகுதியில் காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் காதலி இறந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காதலனும் உயிரிழந்தார்.
சென்னை உள்ளகரம் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் சிங் என்பவரின் மகள் சிம்ரன். சிம்ரன் மடிப்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்ற மாணவர் மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.ஏ. 3 ஆம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இதற்கு இவர்கள் இருவரது வீட்டிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த இருவரும், கடந்த ஜனவரி 26 ஆம் தேதி இளங்கோவின் பிறந்தநாள் அன்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் இரவு 8.15 மணி அளவில் ரயில் முன்பாக குதித்து தற்கொலை செய்தனர். அப்போது சம்பவ இடத்திலேயே சிம்ரன் தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்தார்.
மேலும், இளங்கோ பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இளங்கோ நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தாய்க்கு பேய் ஓட்ட வந்த மந்திரவாதியால் பலாத்காரத்துக்கு உள்ளான மகள்; நாகர்கோவிலில் அதிர்ச்சி