தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிககன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மட்டும் இல்லாமல், நாளையும் மழை உண்டு என்றும், ஆனால் மிதமான மழை முதல் கன மழைவரை பெய்யக்கூடும் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெளிவந்த அறிக்கையில், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
அதோடு, தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிககன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் அதாவது 13 ஆம் தேதி, தென்தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள் ஓரிரு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 மற்றும் 15 தேதிகள் முறையே உள் தமிழகம், கன்னியாகுமாரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மண்டலத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.