Monday, March 18, 2024
மேலும்
    Homeவானிலைஇத்தனை மாவட்டங்களில் மழை பெய்யவிருக்கிறதா ? - பெருமூச்சுவிடும் மக்கள்!

    இத்தனை மாவட்டங்களில் மழை பெய்யவிருக்கிறதா ? – பெருமூச்சுவிடும் மக்கள்!

    கடந்த இரு நாட்களாக காவிரி பாசன மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, திருவாரூர் போன்ற பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த இரு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் தற்போது பெய்கின்ற மழையானது மக்களை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது. 

    மேலும், இன்று காலை சென்னையின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் சென்னை மக்களும் சற்று வெயிலிடம் இருந்து பெருமூச்சு விட்டுக்கொண்டனர். ஆனால் இந்த மித மழையானது அரை மணி நேரம் கூட நீடிக்கவில்லை எனவும் பலர் வருத்தத்துடன் தெரிவத்து வருகின்றனர். 

    இந்நிலையில், சென்னை மண்டல வானிலை ஆய்வு மையமானது, கேரள கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 

    வெளிவந்துள்ள அறிவிப்பின்படி, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், தென் தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிககன மழையும், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    நாளை, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், தென்தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    நாளை மறுநாள், தென்தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் 16 மற்றும் 17 தேதிகளில் தென்தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும், வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....