தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது. அபோது ஆகஸ்ட் 13 தேதி இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அப்போது காகிதம் இல்லாத முறையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் இன்று காலை பத்து மணிக்கு தொடங்கியது.
இந்த முறையும் காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். திமுக ஆட்சிப் பொறுப்பேற்று முழு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை முதன் முதலில் தாக்கல் செய்வது குறிப்பிடத்தக்கது.
இப்போது தாக்கல் செய்யப்படுகின்ற அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. திமுக ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன் அளித்த வாக்குறுதிகளான மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம், மாதந்தோறும் மின்கட்டணம் உள்ளிட்ட திட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
நிதிநிலை அறிக்கை கூட்டம் முடிந்ததும் சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில், நிதிநிலை அறிக்கைக்கான விவாதம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்று முடிவுகள் இன்று எடுக்கப்படும்.
மேலும் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை வேளாண்துறை அமைச்சரான எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் நாளை தாக்கல் செய்ய உள்ளார். இதிலும் முக்கியமாக விவாசயிகளுக்கான சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.