Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா21 தமிழக மீனவர்கள் விடுதலை - எப்போது முற்று பெரும் இலங்கை அட்டூழியம்!

    21 தமிழக மீனவர்கள் விடுதலை – எப்போது முற்று பெரும் இலங்கை அட்டூழியம்!

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இருபத்தியொரு தமிழக மீனவர்களை யாழ்ப்பாணம் பருத்தித்துறை நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது. இதனையடுத்து இருபத்தியொரு தமிழக மீனவர்கள் ஓரிரு நாட்களில் தமிழகம் திரும்ப உள்ளனர்.

    கடந்தாண்டு டிசம்பர் 18-ஆம் தேதி ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்த்த ஐம்பத்தாறு தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை இந்தியா எல்லைக்குள் ஊடுருவி கைது செய்தது. பின்னர், மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் கடந்த ஜனவரி மாதம் தமிழக மீனவர்களுக்கு விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், கொரோனா பரவலை காரணம் கட்டி தமிழக மீனவர்களை இலங்கை அரசு அனுப்பிவைக்கவில்லை. கடந்த சில நாடுகளுக்கு முன்னர்தான் நாற்பத்தி ஏழு மீனவர்கள் தமிழகம் திரும்பினர்.

    fisherman

    இந்நிலையில், தமிழகத்தின் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு அத்துமீறி ஊடுருவிய இலங்கை கடற்படை வீரர்கள் இருபத்தியொரு மீனவர்களை கைது செய்து அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இருபத்தியொரு மீனவர்களும் விசாரணைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர் . இந்த நிலையில் தமிழக மீனவர்கள் கைது தொடர்பாக வழக்கு இன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறை நீதிமன்றம் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது தமிழக மீனவர்கள் இருபத்தியொரு பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனையடுத்து ஓரிரு நாட்களில் இருபத்தியொரு மீனவர்களும் தமிழகம் திரும்ப உள்ளனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....