இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டியை காண நடிகர் ரஜினிகாந்த் மைதானத்திற்கு வருகைத்தந்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட வந்த ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை விளையாடி முடித்துள்ளது. இத்தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றிப்பெற்றது.
இதையடுத்து, ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பாண்டியா, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார்.
இதன்படி, ஆஸ்திரேலிய அணி தற்போது பேட்டிங்கில் களமிறங்கியுள்ளது. ஒருநாள் தொடரை கைப்பற்றியாக வேண்டும் என்ற நோக்கில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன.
இந்நிலையில், இப்போட்டியை காண மும்பை வான்கடே மைதானத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்துள்ளார். இவருடன் மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அமோல் கலேவும் அமர்ந்து போட்டியை பார்த்து வருகின்றனர்.
இருவரும் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டே உரையாடும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஜவான் படத்தில் விஜய்; இவ்வளவு நேரம் வருவாரா?