Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைஇலங்கை அரசின் புது முடிவு - வெளிநாட்டு தூதரகங்கள் நிலை என்ன?

    இலங்கை அரசின் புது முடிவு – வெளிநாட்டு தூதரகங்கள் நிலை என்ன?

    இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சி நிகழ்ந்து வரும் நிலையில் அந்நாட்டு தூதரகங்கள் மூடப்படும் என்று இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. 

    கடந்த சில மாதகங்களாகவே இலங்கையில் வாழும் மக்கள் கடும் பஞ்சத்தில் உள்ளனர். கொரோனா பெருந்தொற்றின் காரணமாக விலைவாசி உயர்வு அதிகமானது. இதனால் மக்கள் அன்றாட தேவைகளுக்கான பொருள்களைக் கூட வாங்க முடியாத சூழ்நிலை உருவாகியது.

    முக்கிய உணவுப் பொருள்களை அந்நாட்டு அரசு அத்தியாவசியமற்ற பொருள்களின் பட்டியலிலும் சேர்த்தது. இதுமட்டும் அன்றி சமையல் எரிவாயு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருள்களுக்காக மக்கள் பல மணிநேரம் தெருக்களில் காத்துக் கிடக்கும் சூழ்நிலை உருவாகியது. மேலும் பல மணி நேர மின்வெட்டு நிகழ்வதால் மக்களின் சிறு தொழில் முதல் பெரும் தொழில் வரை அனைத்தும் பாதிப்பு அடைந்துள்ளன. இந்தியாவும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறது.

    இதனிடையே மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே வீட்டினை முற்றுகை இட்டு போராட்டம் நடத்தினர். மேலும் ராஜபக்சே குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களை பதவி விலகக்கோரி பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலை மற்றும் சுற்றுலாத்துறை நிறுவனங்களும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆளுங்கட்சியில் உள்ள கூட்டணிக் கட்சிகளும் பிரிவதாக முடிவுகளைத் தெரிவித்தன. இதனால் இலங்கை அரசியலில் குழப்பங்கள் நிலவி வருகிறது. 

    இன்றும் நாளையும் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற இருந்தது. அதிலும் சில கட்சிகள் பங்கேற்க மாட்டோம் என்று தெரிவித்த நிலையில் சபாநாயகர் மகிந்த யாப்ப அழைப்பு விடுத்ததால் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இலங்கை அரசின் நிதியமைச்சர் பதவி விலகியதை அடுத்து புது நிதியமைச்சர் அலிப் சப்ரி நேற்று முன்தினம் பதவியேற்றார். இந்நிலையில் நேற்று அவர் பதவி விலகினார். இது மேலும் மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இதனிடையில் ஈராக், ஆஸ்திரேலியா, நார்வே போன்ற நாடுகளின் தூதரகங்களை தற்காலிகமாக மூடப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த மாதம் 30 ஆம் தேதி வரை மூடப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. நேற்று நாடுளுமன்ற வாசலிலேயே மக்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....