Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைமக்களின் எழுச்சியை அடக்க இலங்கை ராணுவத்துக்கு அதிகாரம்

    மக்களின் எழுச்சியை அடக்க இலங்கை ராணுவத்துக்கு அதிகாரம்

    இலங்கையில் ‘தேவைப்பட்டால் தங்கள் சக்தியைப் பயன்படுத்த நாட்டின் படைகளுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது’ என இலங்கை ராணுவம் அந்நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.  

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், ஆளும் அரசுக்கு எதிராக இலங்கை மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்நிலையில், ஜூலை 9ம் தேதி இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், அதிபர் மாளிகையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனிடையே, அதிபர் மாளிகையை விட்டு கோத்தபய ராஜபக்சே வெளியேறினார்.

    இதையடுத்து இலங்கையில் அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து, கோத்தபய ராஜபக்சே கடந்த 15-ம் தேதி தனது அதிபர் பதவியை ராஜிநாமா செய்தார். இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் இடைக்கால அதிபராக ஜூலை 15-ம் தேதியே பதவியேற்றார்.

    அதன்பின்னர், கடந்த 16-ம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடியது. இந்த நாடாளுமன்றக் கூட்டமானது இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கோத்தபய ராஜபக்சேவின் ராஜிநாமா கடிதம் வாசிக்கப்பட்டது. 

    மேலும், இலங்கை நாடாளுமன்றம் ஜூலை 19-ம் தேதி மீண்டும் கூடும் எனவும், அதிபர் பதவிக்கான வேட்புமனுக்களும் 19-ம் தேதியே ஏற்றுக்கொள்ளப்படும் என அந்நாட்டின் நாடாளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக அறிவித்தார். அதன்பின்னர், அன்றைய கூட்டம் நிறைவுபெற்றது.

    இதனை தொடர்ந்து, இலங்கையில் ஜூலை 18-ம் தேதி முதல் அவசர நிலையை அமல்படுத்துவதாக அந்நாட்டு இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்தார். 

    இதற்கிடையே கடந்த 14-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்  நாடாளுமன்றத்தைக் கைப்பற்ற முனைந்தனர். அப்போது, அங்கிருந்த பாதுகாப்பு படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் நேர்ந்தது. 

    இச்சம்பவத்தின்போது, போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் என மொத்தம் 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

    இந்நிலையில், கொழும்புவின் பல இடங்களில் கடந்த 15-ம் தேதியும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தது. இதில் போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக அந்நாட்டு காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில் சுவாச பிரச்சனை ஏற்பட்டு 26 வயது வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். 

    இதேப்போல போராட்டக்காரர்கள் தாக்கியதில் ராணுவ வீரர்கள் இருவர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், கடந்த 20-ம் தேதி இலங்கை ராணுவம் செய்திக் குறிப்பு வெளியிட்டது. அதில், பொது சொத்துகள், முக்கிய நிறுவனங்கள் மற்றும் மனித உயிர்களுக்கான பாதுகாப்பு ஆயுதப்படைகளின் பொறுப்பின் கீழ் வருவதால், தேவைப்பட்டால் தங்கள் சக்தியைப் பயன்படுத்த படைகளுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் அளிக்கப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

    தவிக்கும் இலங்கையை மீட்பாரா புதிய அதிபர்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....