Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்திய மீனவர்கள் 9 பேருக்கு சிறை விதித்த இலங்கை அரசு

    இந்திய மீனவர்கள் 9 பேருக்கு சிறை விதித்த இலங்கை அரசு

    இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 9 பேருக்கு செப்டம்பர் 6-ம் தேதி வரை சிறை விதிக்கப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடந்த 22-ம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 9 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும், அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர்.

    இலங்கையின் இந்நடவடிக்கையை தொடர்ந்து, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

    இந்நிலையில், திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நாகப்பட்டின மீனவர்களுக்கு செப்டம்பர் 6-ம் தேதி வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....