Tuesday, March 19, 2024
மேலும்
    Homeஆன்மிகம்விநாயகரை வழிபட்டால் இவ்வளவு நன்மைகளா! இதோ!

    விநாயகரை வழிபட்டால் இவ்வளவு நன்மைகளா! இதோ!

    முதன்மைக் கடவுள் விநாயகர் தான், காரணம் விநாயகர் பிறந்தபோது சிவனே கூறினார், அனைத்துக் கடவுள்களுக்கு முதன்மைக் கடவுள் விநாயகர் தான் என்று. அவர் கூறியதால் மட்டுமல்ல எந்த ஒரு காரியத்தையும் செய்வதற்கு முன்பு யானைமுகனை வழிப்பட்டு செய்தால் நன்மைகள் நிறைவாகத் தான் முடியும்.

    • கல்விக்கு கருணை காட்டுபவன் விநாயகர் தான், விநாயகரை வழிபாடு செய்தால் படிப்பில் கவனமும் புத்தியும் கூடும். 
    • பிள்ளைகள் காலையில் எழுந்ததும் ‘அல்லல் போம்’ துதியை செய்துவிட்டு தொடங்கினால் அவர்களுக்கு கல்வி,அறிவு போன்றவை கிடைக்கும்.
    • வேலை ரீதியாகவும் அல்லது பயணங்கள் செய்யப் போகும் முன்பும் விநாயக வழிபாடு செய்து தொடங்கினால் தடைகள் எல்லாம் தகர்ந்துவிடும்.
    • வீட்டில் உள்ள பிரச்சனைகள், தொழில் ரீதியான தடைகள், பணவரவு போன்ற எல்லாவித பிரச்சனைகளுக்கும் விநாயகரை வழிபட்டு வந்தால் நன்மைகள் அதிகம் நடக்கும். 
    • மிகவும் முக்கியமான ஒன்று வீட்டுக் கடன் தீர்வதற்கு ஒரு ரூபாய் அல்லது பதினோரு ரூபாய் போன்ற வேண்டுதல்களை வைத்துப் பாருங்கள் எல்லாம் கைகூடிவரும்.
    • வேண்டுதல் வைப்பவர்கள் மனதினை தூய்மையாக வைத்திருப்பது மிகவும் முக்கியம் அப்போது தான் விநாயகப் பெருமான் மனம் இறங்கி வந்து உங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவான்.
    • விநாயக துதிப் பாடுதல், தினம் அவரை வணங்குதல் போன்றவை இன்னும் அதிக நன்மைகளைத் தரும்.
    • உங்களுக்காக வேண்டுவதை விட உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்காக விநாயக பிள்ளையிடம் வேண்டிப்பாருங்கள் அதிக நன்மைகளை உங்களுக்கும் அருளுவார். 
    • நீங்கள் வேண்டுவதை விட, விநாயகரை நினைத்து நம்பிக்கையோடு இருங்கள் அதுவே உங்களுக்கு என்றும் நன்மைகளைத் தரும். 
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....