Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைஇலங்கை மக்களுக்கு அடுத்த வேளை உணவு கேள்விக்குறி?

    இலங்கை மக்களுக்கு அடுத்த வேளை உணவு கேள்விக்குறி?

    இலங்கையில் 60 லட்சம் பேர் அடுத்த வேளை உணவுக்கு நிச்சயமற்ற சூழலில் உள்ளனர் என அந்நாட்டின் ஐ.நா. உலக உணவு அமைப்பு இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், ஆளும் அரசுக்கு எதிராக இலங்கை மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்நிலையில், கடந்த ஜூலை 9-ம் தேதி இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், அதிபர் மாளிகையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனிடையே, அதிபர் மாளிகையை விட்டு கோத்தபய ராஜபக்சே வெளியேறினார்.

    இதைத் தொடர்ந்து இலங்கையில் அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.

    அதன் பிறகு, கோத்தபய ராஜபக்சே கடந்த ஜூலை 15-ம் தேதி தனது அதிபர் பதவியை ராஜிநாமா செய்தார். இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் இடைக்கால அதிபராக ஜூலை 15-ம் தேதி அன்றே பதவியேற்றார்.

    அதன்பின்னர், கடந்த ஜூலை 16-ம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடியது. இக்கூட்டமானது இலங்கையின் நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கோத்தபய ராஜபக்சேவின் ராஜிநாமா கடிதம் வாசிக்கப்பட்டது. 

    மேலும், இலங்கை அதிபர் தேர்தல் ஜூலை 20-ம் தேதி நடைபெறும் என நாடாளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக அறிவித்தார். அதன்பின்னர், அன்றைய கூட்டம் நிறைவுபெற்றது.

    இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை 20-ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில்  ரணில் விக்ரமசிங்கே 134 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

    இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 21-ம் தேதி இலங்கையின் தலைமை நீதிபதி ஜயந்த ஜெயசூரிய முன்னிலையில் ரணில் விக்கிரமசிங்கே, புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.

    இதையடுத்து, ஜூலை 22-ம் தேதி இலங்கையின் புதிய பிரதமராக 73 வயதுள்ள தினேஷ் குணவர்தன பதவியேற்றார். 

    இந்நிலையில், இலங்கைக்கான ஐ.நா.வின் உலக உணவு அமைப்பின் இயக்குனர் அப்துர் ரகீம் சித்திக் செய்தியாளர்களை இன்று (ஜூலை 23) சந்திதார். 

    இந்தச் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது :

    இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி நாட்டில் 63 லட்சம் பேருக்கு உணவு பாதுகாப்பின்மை உள்ளது. சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை இல்லாத வகையில், இலங்கை பொருளாதாரம் உள்ளது.

    இலங்கை தற்போது உணவு நெருக்கடியில் சிக்கி மோசமடைந்த சூழலில் காணப்படுகிறது. 

    மேலும், அடுத்த இரு மாதங்களில், ஏற்கனவே திணறச் செய்யும் பணவீக்கம் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூன் வரையில், உணவு பணவீக்க விகிதம் 80 சதவீதத்துக்கும் கூடுதலாக உள்ளது.

    இதைத் தொடர்ந்து, அவசரகால உணவு, ஊட்டச்சத்து பொருள்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கான உணவு ஆகியவற்றை பெற்று, 30 லட்சம் மக்களுக்கு வழங்குவதற்கு 6.3 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான தொகை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தத் தொகையைக் கொண்டு நடப்பு ஆண்டு டிசம்பர் வரை உணவு தேவையை பூர்த்தி செய்ய முடிவானது. 

    இந்நிலையில், இதுவரையில் அவற்றில் 30 சதவீதம் அளவுக்கே நிதியை திரட்ட முடிந்துள்ளது. உணவு பாதுகாப்பு என்பது அனைத்து நேரங்களிலும் அனைத்து மக்களுக்கும் போதிய ஊட்டச்சத்து உணவு கிடைப்பது என்பதே ஆகும்.

    சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 4ல் ஒரு பங்கு மக்கள், அதாவது 53 லட்சம் பேர் தங்களது உணவின் அளவை குறைத்து உள்ளனர் அல்லது உணவையே தவிர்த்து விடுகின்றனர் அல்லது தங்களது குடும்பத்தில் வளர்ந்து வரும் நிலையில் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கு உணவை விட்டுக் கொடுத்துவிடுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இவ்வாறு அப்துர் ரகீம் சித்திக் தெரிவித்தார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....