பரமக்குடியில் சத்துணவு முட்டை சாப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அருகே சிவானந்தபுரத்தில் நகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் 240 மாணவ-மாணவிகள் பாடம் பயின்று வருகின்றனர். இவர்களில் 128 மாணவர்கள் மதியம் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மதியம் சத்துணவு சாப்பிட்ட மாணவ-மாணவிகளில் 12 பேருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. மேலும் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவ-மாணவிகளை ஆட்டோ வரவழைத்து பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், மாணவர்கள் சாப்பிட்ட முட்டை சரியாக வேகாமல் இருந்ததாகவும், அது தான் இவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்று வலி ஏற்பட காரணமாக இருந்திருக்கலாம் என்றும் கூறினர்.
மதிய சத்துணவு சாப்பிட்ட மாணவ-மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டது பரமக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாணமாக வீடுகளின் கதவை தட்டும் இளம்பெண்; உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!