ஜார்கண்ட் மாநிலம், தன்பாத்தில் நேற்று வியாழக்கிழமை ஒரு வீட்டின் சுவர் மீது சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
ஜார்கண்ட் மாநிலம், தன்பாத்தில் நேற்று ஒரு வீட்டின் சுவர் மீது சிறிய ரக விமானம் (glider plane) மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் நூல் இழையில் உயிர் தப்பினர். மேலும் இரண்டு பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்தில் சிக்கியவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், அந்த விமானம் பயங்கர சேதம் அடைந்தது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற காவல்துறையினர் இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கூடியதால் சற்று நேரம் பரபரப்பு நீடித்தது.
இதனிடையே, இந்த விமானம் விபத்தில் சிக்கியது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Live video of Glider #Accident #Jharkhand: A glider, which took off from #Dhanbad airport, crashed after felling at a house near Birsa Munda Park, leaving the pilot and a child on board seriously injured.#viral #viralvideo #viral2023 #ViralVideos #planecrash #India pic.twitter.com/Yx3GxYSivr
— Siraj Noorani (@sirajnoorani) March 24, 2023
சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை