Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்படாதது தொழிலாளர் நலனுக்கு எதிரானது: இராமதாஸ் கருத்து!

    ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்படாதது தொழிலாளர் நலனுக்கு எதிரானது: இராமதாஸ் கருத்து!

    தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்கள், பணியின் போது உயிரிழந்தவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களின் குடும்பங்கள் ஓய்வுக்கால பயன்களை பெற முடியாமல் தவித்து வருவதைக் கூறி தன் அறிக்கையை ஆரம்பித்தார், மருத்துவர் ராமதாஸ்.

    குடும்ப சூழலை கருத்தில் கொண்டு ஓய்வுக்கால பயன்களை வழங்க வேண்டும் என்ற அவர்களின் அடிப்படையான கோரிக்கையை பரிசீலிப்பதற்குக் கூட  தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் முன்வராததை கண்டித்த அவர், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி கடந்த 10 ஆண்டுகளாக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் அனைவரும் வெறுங்கைகளுடன் தான் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். 

    போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றிய தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட வேண்டிய ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சத்திற்கும் கூடுதலான ஓய்வுக் கால பலன்கள் பல ஆண்டு இழுத்தடிப்புக்குப் பிறகு தான் வழங்கப்பட்டிருக்கின்றன என்றும், இதுதொடர்பாக பல முறை வலியுறுத்தியதன் பயனாக 31.03.2020 வரை ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக்கழகங்களின் பணியாளர்களுக்கு ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்பட்டு விட்டன என்றும் ராமதாஸ் அவர்கள் தெரிவித்தார்.

    மேலும், “ஓய்வு பெறுவதற்கான வயது 60 ஆக உயர்த்தப்பட்டதால், அடுத்த இரு ஆண்டுகளுக்கு எவரும் ஓய்வு பெற மாட்டார்கள்;  2022-க்குப் பிறகு நிலைமை சீரடையும் என நம்பப்பட ஆனால், கள நிலைமையோ முற்றிலும் வேறாக உள்ளது” என்றார், ராமதாஸ்.  

    இராமதாஸ் கூறிய கள நிலவரம் 
    • ஏப்ரல் 2000 ஆவது ஆண்டுக்குப் பிறகு வயது முதிர்வின் அடிப்படையில் எவரும் ஓய்வு பெறவில்லை என்றாலும் சுமார் 1000 பணியாளர்கள் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர். 
    • நூற்றுக்கணக்கான பணியாளர்கள் பணிக்காலத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் உடனடியாக ஓய்வுக் கால பயன்கள் அனைத்தும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். 
    • கிட்டத்தட்ட இரு ஆண்டுகளாக இவர்களுக்கு/ குடும்பங்களுக்கு ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்படவில்லை. ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அதனால் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
    ஓய்வுக்கால பயன்கள் 

    ராமதாஸ் அவர்கள், விருப்ப ஓய்வு பெற்றவர்களின் குடும்பங்களுக்கும், பணிக்காலத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் கல்விச் செலவு, திருமண செலவு, மருத்துவச் செலவு என ஏராளமான பொருளாதாரக் கடமைகள் உள்ளன என்றும் அவர்களில் பலரும் ஓய்வு பெறுவதற்கு இன்னும் சில ஆண்டுகள் இருக்கும் போதிலும், முன்கூட்டியே விருப்ப ஓய்வு பெற்றதற்கு காரணம், ஓய்வுக்கால பயன்களைக் கொண்டு செலவுகளை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை தான் என்றும், ஆனால், கடந்த இரு ஆண்டுகளில் விருப்ப ஓய்வு பெற்ற சுமார் 1000 பணியாளர்களில் ஒருவருக்குக் கூட, இன்று வரை ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்படவில்லை என்பதையும் தனது அறிக்கையில் தெரிவித்தார். 

    “மாதம் ரூ.15,000 வரை ஓய்வூதியம் மட்டுமே பெறும் ஓய்வு பெற்ற ஊழியர்களால் எவ்வாறு வட்டியுடன் அவர்களின் கடனை அடைக்க முடியும்?

     மார்ச் மாதம் 2003-ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்தவர்களின் நிலை இதுவென்றால், அதற்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. புதிய ஓய்வூதியத்தின் படி பணியில் சேர்க்கப்பட்ட அவர்களுக்கு ஓய்வூதியமும் வழங்கப்படுவதில்லை. அதனால், அவர்கள் அன்றாட செலவுகளை சமாளிக்கவே திணறுகின்றனர்” என ராமதாஸ் அவர்கள் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

    திமுக தன் தேர்தல் அறிக்கையில்த, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க ஓய்வுக்கால பயன்களும் வழங்கப்படாதது தொழிலாளர் நலனுக்கு எதிரானதாகும் எனவும் ராமதாஸ் குற்றம் சாட்டினார். 

    போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் பணக்காரர்கள் அல்ல. ஓய்வுக்கால பயன்கள் எனப்படுபவை அவர்கள் செலுத்திய பணத்தை அவர்களுக்கு திருப்பித் தருவது தான் என்றும் அதில் தாமதம் செய்வது நியாயமல்ல எனவே, போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முன்வருவதுடன், ஓய்வுக்கால பயன்களையும் உடனடியாக வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என ராமதாஸ் அவர்கள் தெரிவித்தார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....