Tuesday, March 19, 2024
மேலும்
    Homeஜோதிடம்இன்று ராகு-கேது பெயர்ச்சி: எந்தெந்த ராசிகளுக்கு நன்மை? தீமை?

    இன்று ராகு-கேது பெயர்ச்சி: எந்தெந்த ராசிகளுக்கு நன்மை? தீமை?

    ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் என்று அனைவருக்கும் தெரியும். ராகு ஆசைக்காரகன் புகழைப் கொடுப்பான். கேது மோட்சகாரகன் அறிவையும் அனுபவத்தையும் கொடுப்பான். ராகுவும் கேதுவும் ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை பெயர்ச்சி ஆகின்றன. நவகிரகங்களில் இவை இரண்டு கிரகங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. 12 ராசிகளின் உயர்வு தாழ்வை இவையே முடிவும் செய்கின்றன. ராகு காலம், எமகண்ட நேரங்கள் பார்த்துதான் எந்த ஒரு நல்ல காரியமும் செய்வது வழக்கம். அதனால் தான் இந்த ராகு கேது பெயர்ச்சி முக்கிய பங்கு வகிக்கின்றது. இன்று அதாவது 21/03/2022 பகல் 03:13 க்கு ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு செல்கின்றான். கேது விருட்சக ராசியிலிருந்து துலாம் ராசிக்கு செல்கின்றான். இந்தப் பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் நடைபெறுகிறது. 

    மேலும் ஜனகால ஜாதகத்தில் 3, 6, 11 ஆகிய இடங்களில் இருந்தால் நல்ல நன்மைகள் தரக் கூடியவை. மேலும் ராகுவுக்கும் கேதுவுக்கும் 3, 7, 11 போன்றப் பார்வைகள் மிகவும் சுபநிகழ்வைத் தரக்கூடியது. மேஷம், ரிஷபம், கன்னி, மகரம் போன்ற ராசிகளில் ராகு-கேது இருந்தால் நல்ல பலன்களைத் தரும்.  

    அதிக நன்மைகள் நடக்க இருக்கும் ராசிகள்:

    ரிஷபம், மிதுனம், விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு இதுவரை இருந்த தொல்லைகள் தொந்தரவுகள், தீமைகள் என அனைத்தும் விலகி, நன்மைகள் அதிக அளவில் நடைபெறும். மேலும் எதிர்பார்த்திராத பொன், பொருள் சேர்க்கை நடைபெறும். சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் நடைபெறும். 

    பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்:

    அருகில் உள்ள நவகிரக சன்னதிக்கு சென்று அனைத்து ராசிக்காரர்களும் வழிபாடு செய்வது நல்லது. குறிப்பாக மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம்,விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் இராசிகள் பரிகாரம் செய்வது மிக நல்லது. 

    கவனம் அதிகம் கொள்ள வேண்டிய ராசிகள்: 

    மேஷம், கடகம், சிம்மம், மகரம், மீனம் ஆகிய இராசிக்காரர்கள் அனைவரும் சற்று கூடுதல் கவனத்தை ஆரோக்கியத்திலும் வேலை கவனத்தில் இருப்பது நல்லது. எந்த ஒரு சிறிய உடம்பு உபாதை ஏற்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. 

    அந்த இந்த இராசிகள் என்று பயமோ பதற்றமோ வேண்டாம். அனைத்து இராசிக்காரர்களும் எல்லாம் வல்ல சிவ பெருமானை மனதார நினைத்து அவனை தினந்தோறும் வழிபட்டு வந்தால் தீமைகள் விலகி நன்மைகள் நடக்க வழிப் பிறக்கும். அனைத்தையும் அடக்கி ஆள்பவன் சிவபெருமான், தேவர்களே பிரச்சனை என்றால் இவரிடம் தான் செல்வார்கள். ஆகையால் ஓம் நமச்சிவாய எனும் மந்திரத்தை உச்சரித்தபடியே இருங்கள்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....