Saturday, March 23, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிபுதுச்சேரியில் ஜி20 மாநாடு; தொடங்கியது முதல் நிலை ஆலோசனை கூட்டம்!

    புதுச்சேரியில் ஜி20 மாநாடு; தொடங்கியது முதல் நிலை ஆலோசனை கூட்டம்!

    புதுச்சேரி மரப்பாலத்தில் உள்ள தனியார் அரங்கில் இன்று காலை 9.30 மணிக்கு ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக அறிவியல் 20 மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    ஜி20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று நடத்துகிறது. வரும் செப்டம்பர் மாதம் இந்த மாநாடு தொடங்கும் என தெரிகிறது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிக்க இந்தியா முழுவதும் 200 நகரங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

    பல்வேறு மாநிலங்களில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டங்களும் நடைபெறுகிறது. அதன்படி புதுச்சேரியில் இரண்டு நாட்கள் நடைபெறும், ஜி20 பிரதிநிதிகள் மாநாடு இன்று தொடங்கியது.

    புதுச்சேரி மரப்பாலத்தில் உள்ள தனியார் அரங்கில் இன்று காலை 9.30 மணிக்கு ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக அறிவியல் 20 மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, சீனா, துருக்கி, சுவீடன், தென்கொரியா, ஆஸ்திரேலியா, பிரேசில், பிரான்ஸ், இந்தோனேசியா, ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 75 பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

    கடந்தாண்டு ஜி20 மாநாடு நடத்திய இந்தோனேசியா, நடப்பு ஆண்டு தலைமை பொறுப்பேற்றுள்ள இந்தியா, அடுத்த ஆண்டு தலைமை பொறுப்பேற்கவுள்ள பிரேசில் நாடுகளின் தலைமை உரையுடன் மாநாடு தொடங்கியது.

    உலகளாவிய முழுமையான ஆரோக்கியம், பசுமையான எதிர்காலத்திற்காக சுத்தமான ஆற்றலை ஏற்றுக்கொள்வது, அறிவியலை சமூகம் மற்றும் கலாச்சாரத்துடன் இணைத்தல் என்ற வகையில் விஞ்ஞானத்தின் மூலம் வரும் தீர்வுகளை செயல்படுத்துவது போன்ற மூன்று முக்கிய தலைப்புகளில் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகின்றது.

    வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்கும் விடுதிகள், விமான நிலையம், மாநாட்டு அரங்கம் ஆகியவை அமைந்துள்ள பகுதிகளை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் அரங்கை சுற்றிலும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ‘புது வரலாறே..’ – இந்திய மகளிர் கிரிக்கெட் அணி செய்த சாதனை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....