Thursday, April 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பொன்னியின் செல்வன் படக்குழுவின் திடீர் அறிவிப்பு; குஷியில் ரசிகர்கள்!

    பொன்னியின் செல்வன் படக்குழுவின் திடீர் அறிவிப்பு; குஷியில் ரசிகர்கள்!

    மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஐமேக்‌ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகிய திரைப்படம்தான், பொன்னியின் செல்வன். 

    கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்த இத்திரைப்படம் இரு பாகங்களாக உருவாகியுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது. 

    பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வெளிவந்து பற்பல சாதனைகளை நிகழ்த்தியது. குறிப்பாக, 450 கோடி என்ற மாபெரும் வசூல் சாதனையை புரிந்தது. 

    இதைத்தொடர்ந்து, சமீபத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் படக்குழு அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளனர். 

    அதன்படி, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகமும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியான நிலையில், இப்படமும் ஐமேக்‌ஸில் வெளியாவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

    காஷ்மீருக்கு பறந்த ‘தளபதி 67’ படக்குழு; வியக்கவைத்த விஜய் ரசிகர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....