மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் திரையரங்குகளில் வெளியானது.
பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற புதினமே, பொன்னியின் செல்வன். இப்புதினத்தை இயக்குநர் மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ என்ற பெயரிலேயே இரு பாகங்கள் கொண்ட படமாக எடுத்தார். இதில் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வெளியானது.
இப்படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா, சரத்குமார் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்த இப்படம் 450 கோடிக்கும் அதிகமான வசூல் சாதனையை புரிந்தது.
மேலும், சில மாதங்களுக்கு முன் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படியே இன்று பொன்னியின் செல்வன் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
முன்னதாக, நடிகர் கமல்ஹாசன் குரலில் பொன்னியின் செல்வன்-2 படத்தின் அறிமுக விடியோ சமீபத்தில் வெளியாகியது. முதல் பாகத்திற்கும் கமல்ஹாசன் குரலில் கதாபாத்திரங்கள் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
வெளியானது, அசோக் செல்வனின் சபாநாயகன் படத்தின் டீசர்!