சென்னையில் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை, திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா என்ற பெண். இவருக்கு வயது 38. இவர் தனது கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், தான் திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்ற நபருக்கும் கவிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பிறகு, இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.
மேலும் யுவராஜ் கவிதாவை திருமணம் செய்துகொள்வதாக தெரிவித்து ஆசை வார்த்தைகளை கூறி வந்துள்ளார்.
சிறிது காலம் கழித்து, யுவராஜிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கவிதா கேட்டு இருக்கிறார். ஆனால், அதனை யுவராஜ் மறுத்துள்ளார். மேலும் கவிதாவை யுவராஜ் கடுமையாக மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
இதனால், மனம் தளர்ந்த கவிதா திருவொற்றியூர் மகளிர் காவல் நிலையத்தில் யுவராஜ் குறித்து புகார் அளித்தார். இதையடுத்து யுவராஜிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தீடிரென தீப்பிடித்த கார்; கர்ப்பிணி பெண் உட்பட இருவர் பலி