நாகர்கோவிலில், தாய்க்கு பிடித்த பேயை விரட்டுகிறேன் என்று 8-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மந்திரவாதியை காவல்துறையினர் கைது செய்தனர் .
நாகர்கோவிலில் வடசேரியிலுள்ள மேலகலுங்கடி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 35 ). இவர் தொடர் காலமாக பல மாந்திரிக சடங்குகளும், பூஜைகளும் செய்து வந்துள்ளார். இவரிடம் அதே ஊரை சேர்ந்த பள்ளிவிளையில் வசிக்கும் தொழிலாளி ஒருவர் தனது மனைவிக்கு அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்படுகிறது என்று கூறி அழைத்து வந்திருக்கிறார்.
இதை அறிந்த அந்த மந்திரவாதியாகிய மணிகண்டன் உங்கள் மனைவிக்கு பேய் பிடித்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதன் காரணமாக மந்திரவாதியாகிய மணிகண்டன் அடிக்கடி தொழிலாளியின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.
இந்த தொழிலாளிக்கு இரு மகள்கள் இருந்தனர். இதில் மூத்தமகள் 8- ஆம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த ஒரு சில நாட்களாக, 8 -ஆம் வகுப்பு படிக்கும் அச்சிறுமியின் நடவடிக்கைகளில் மாற்றம் இருப்பதை பெற்றோர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும், அச்சிறுமிக்கு வயிறு வலி போன்ற உடல் உபாதைகள் அடிக்கடி நேர்ந்த வண்ணம் இருந்திருக்கிறது.
இதை அறிந்த பெற்றோர் அருகிலிருந்த ஆசாரிப்பாளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அச்சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அச்சிறுமி 4 மாத கர்ப்பமாக இருந்ததை கூறினார். இச்செய்தியை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து அச்சிறுமியிடம் விசாரித்தனர். மந்திரவாதியாகிய மணிகண்டன்தான் தனுக்கு பிஸ்கட், சாக்லேட் ஆகியவற்றை வாங்கித்தந்து தனியாக அழைத்து சென்று பலாத்காரம் செய்ததாகவும் கூறினார்.
மேலும், உன் தாயாருக்கு உடல் நிலை சரியாக வேண்டும் என்றால் இதை யாரிடமும் கூறக்கூடாது என்றும் கூறியதாக தெரிவித்தார். இதையடுத்து நாகர்கோவில் மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். இதனையடுத்து காவல் துறையினர் புகாரின் பேரில் மணிகண்டன் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
பரோட்டோ சாப்பிட்ட சென்னை இளைஞர் பலி