Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்செல்லப்பிராணிகள்செல்லப்பிராணிகள் என்றால் விலங்குகள் மட்டும்தானா? மகிழ்ச்சியை தரும் இவைகளும் உண்டு!

    செல்லப்பிராணிகள் என்றால் விலங்குகள் மட்டும்தானா? மகிழ்ச்சியை தரும் இவைகளும் உண்டு!

    செல்லப்பிராணிகள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலமாகி விடுவார்கள். ஒரு சிலரைத் தவிர செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் பெரும்பான்மையிணருக்கு ஆர்வமும், விருப்பமும் அதிகமாக இருக்கும். அதிலும் நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளை வளர்ப்பதில் அதிக அளவு ஆர்வம் காட்டுகின்றனர் என்றே கூறலாம்.

    அது மட்டுமில்லாமல் ‘லவ் பேர்ட்ஸ்’ எனப்படும் கிளி வகைகளையும் அதிக அளவில் வளர்ப்பதை மக்கள் விரும்புகின்றனர். இதுபோன்ற வளர்ப்பு பிராணிகளை வீட்டில் வளர்ப்பதால் நம்மிடம் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும் என்பது ஆன்மீக ரீதியாக கண்டுபிடிக்கபட்ட உண்மை.

    வீட்டில் வளர்க்கப்படும் பறவைகளில் லவ் பேர்ட்ஸ்க்கு தனி இடம் உண்டு. கொஞ்சம் இடம் இருந்தாலும் போதும் சின்ன கூண்டு வைத்து இதில் இரண்டு ஜோடி பறவைகள் வரை வளர்க்கலாம். கீச் கீச் சத்தம் கேட்டாலே மனதில் மகிழ்ச்சி குடியேறும். இந்த பறவைகளை வளர்ப்பது தனி கலை. அவற்றை குழந்தைகள் போல பராமரித்தால் நம் கைகளில் வந்து விளையாடும்.

    பொதுவாக நாம் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு வீட்டில் இருக்கும் துர் சக்தியை கண்டுபிடிக்கும் ஆற்றல் உண்டு. வீட்டில் இருப்பவர்களை தீய சக்திகளிடமிருந்து முதலில் பாதுகாப்பது இவைகள் தான். வீட்டில் தீய சக்திகள் இருந்தால், நன்றாக ஆரோக்கியமாக இருக்கும் உங்கள் வீட்டு லவ் பேர்ட்ஸ்கள் கூட திடீரென இறந்துவிடும். இப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்திருந்தால் இந்த பறவைகள் உங்களை மிகப் பெரிய விஷயத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறது என்று அர்த்தம்.

    பறவைகளை வளர்ப்பதால் அதிர்ஷ்டம் வரும் என்றும் கூறுவார்கள். அதிலும் அனைவர்க்கும் பிடித்தமான ‘லவ் பேர்ட்ஸ்’ போன்ற கிளி வகையை சார்ந்த பறவைகளை வீட்டில் வளர்ப்பதால் வீடு சுபிட்சமாக இருக்கும் என்றும், உங்களுக்கு வர இருக்கும் அதிர்ஷ்டத்தை தடுக்காமல் பாதுகாக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

    பறவைகளை நேசிப்பவர்கள் அவற்றை துன்புறுத்துவதில்லை. இவற்றை நீங்கள் வளர்க்க விரும்பினால் உங்கள் வீட்டை சுற்றி மரங்களையும் வளர்க்க வேண்டும். புதனின் ஆதிக்கம் பெற்ற ராசிக்காரர்கள் பறவைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவர் என்று கூறப்படுகிறது.

    உங்கள் வீட்டில் பறவைகளை கூண்டில் அல்லாமல் வெளியில் வைத்து வளர்க்கிறீர்கள் என்றால் நீங்கள் மிகப் பெரிய அதிர்ஷ்டசாலி என்றே கூறலாம். உங்களிடம் நல்ல சிந்தனைகளும், செல்வ வளமும் பெருகியிருக்கும்.

    கூடு :

    ‘லவ் பேர்ட்ஸ்’ பறவைக் கூட்டினை வீட்டின் மூலையில் கட்டி தொங்க விட வேண்டும். கூண்டில் இரண்டு சிறிய பானைகளை கட்டி விடுவது அவை முட்டை வைத்து அடை காக்க வசதியாக இருக்கும். அவை ஊஞ்சல் விளையாட ஒரு கட்டை வைப்பது அவசியம்.

    அதற்கு பிறகு தீனி வைக்க ஒரு கிண்ணம், தண்ணீர் பாத்திரம் வைப்பது அவசியம். தண்ணீர் பாத்திரம் பாதுகாப்பனதாக இருக்கவேண்டும். இல்லை எனில் பறவைகள் அதில் விழுந்து வெளியேற முடியாமல் தவிக்கும் என்பதை மறவாதீர்கள்.

    லவ் பேர்ட்ஸ் பறவைகள் திணை விரும்பி சாப்பிடும். மேலும், சீமைப்பொன்னாங்கன்னி கீரை, பசளிக்கீரை தரலாம். முட்டைக்கோஸ், விதை நீக்கிய ஆப்பிள், மாம்பழம், போன்றவைகளை உணவாக தரலாம்.

    கூண்டுக்குள் ஒரு கணவா ஓடு போட்டு வைத்தால் அதை கொத்தி கொத்தி அலகை கூர் தீட்டிக்கொள்ள வசதியாக இருக்கும்.

    கூண்டிற்குள் நியூஸ் பேப்பர் விரித்து வைக்கவேண்டும். அவை கழிவுகளை அகற்ற எளிதாக இருக்கும். தினமும் தண்ணீர் மாற்றி விடவேண்டும்.

    பறவைகளின் தீனிக்கு எறும்பு வருவது வாடிக்கை. இது பறவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். முட்டை போடும் பருவத்தில் கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும்.

    குஞ்சு பொறித்த நேரத்தில் எறும்புகளிடம் இருந்து அவற்றை பாதுகாப்பது அவசியம். எனவே கூண்டைச் சுற்றி எறும்புக் கொல்லி சாக்பீஸ்களை பூசுவது பாதுகாப்பானது.

    லவ்பேர்ட்ஸ் அடிக்கடி முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். எனவே எளிதில் குடும்பம் பெருகுவதோடு நம் மகிழ்ச்சியையும் அதிகப்படுத்தும்.

    தினமும் நீங்கள் வளர்க்கும் பறவைகளுடன் ஒரு 30 நிமிடமாவது பேசுங்கள். அவைகளுடன் விளையாடுங்கள். இதை லவ்பேர்ட்ஸ் போன்ற பறவைகள் அதிகம் விரும்பும். உங்களது மன அழுத்தமும் இதன் மூலம் குறைய வாய்ப்பு உள்ளது.

    பொதுவாக பறவைகளை வளர்ப்பவர்களுக்கு கோபம் அதிகமாக வராது. அவர்களிடம் அதிக அன்பும், அக்கறையும், வெளிப்படையான பேச்சும் கட்டாயம் இருக்கும்.

    அதிலும் குறிப்பாக லவ்பேர்ட்ஸ் வளர்ப்பதால் குடும்பத்தில் பிரச்சனை, கணவன் மனைவி பிரச்சனை தவிர்க்கலாம். சில ராசிக்காரர்கள் விலங்குகளை வளர்ப்பதை விட பறவைகள் வளர்ப்பது நல்ல அதிர்ஷ்டத்தை தரும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....