Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபெரம்பலூர் அருகே பயங்கரம்: மாமுல் தர மறுத்ததால் மருந்தக உரிமையாளர் அடித்துக்கொலை!

    பெரம்பலூர் அருகே பயங்கரம்: மாமுல் தர மறுத்ததால் மருந்தக உரிமையாளர் அடித்துக்கொலை!

    பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தை சேர்ந்த மாரப்பன் இவரது மகன் நாகராஜன். மருந்தகம் ஒன்றை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் லாடபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் பிரபாகரன், ஆனந்த் மகன் ரகு ஆகிய இருவரும் மருந்தகம் நடத்தி வரும் நாகராஜை நீண்ட நாட்களாக மிரட்டி பணம் பெற்று வந்ததாக தெரிகிறது.

    நாகராஜன், இயல்பிலேயே பயந்த சுபாவம் கொண்டவர் என தெரிகிறது. இதனை அறிந்து கொண்ட பிரபாகரன் மற்றும் ரகு நாகராஜை மிரட்டி அடிக்கடி மாமுல் வசூலித்து வந்து உள்ளனர்.

    நேற்றிரவும் வழக்கம் போல் மாமூல் பணம் கேட்டு கடை மூடும் நேரத்தில் நாகராஜை மிரட்டி உள்ளனர். மாமூல் தர மறுத்த நாகராஜன் இது குறித்து மாமுல் கேட்ட இருவரின் பெற்றோர்களிடம் முறையிட்டுள்ளார்.

    இதில் ஆத்திரமடைந்த இருவரும் நாகராஜனை ஊராட்சி அலுவலகத்தின் பின்புறம் அழைத்து சென்று சரமாரியாக ஆயுதங்களால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் காயம் அடைந்த நாகராஜ், ரத்தம் வழிந்த நிலையில் தட்டுதடுமாறி வீட்டிற்கு சென்றுள்ளார்.

    இதனை பார்த்த உறவினர்கள் அலறி துடித்து, அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் வீட்டிற்கு திரும்பிய அவருக்கு நேற்றிரவு திடீரென ரத்த வாந்தி வந்துள்ளது.

    இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை மீண்டும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், நாகராஜன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பிவைத்தனர்.

    பின்னர் இச்சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில், பயந்த சுபாவம் கொண்ட நாகராஜனிடம் மாமூல் பெற்ற ரவுடிகள் இருவரும், போலீசில் புகார் கொடுத்தால் சாதி பெயரை சொல்லி திட்டியதாக பொய் புகார் கொடுத்து சிறையில் தள்ளிவிடுவோம் என நாகராஜனை மிரட்டி உள்ளனர். மேலும், இது போன்ற வழக்குகளுக்கு ஜாமீன் கிடைக்காது என்றும் பயமுறுத்தி உள்ளனர்.

    பின்னர் மருந்தகத்தைத் திறக்க முடியாது எனவும் அச்சுறுத்தி உள்ளனர். இதனால் நாகராஜன் மன உளைச்சலுக்கு உள்ளாகி தனது நண்பர்களிடம் இவர்களை பற்றி கூறியுள்ளார். இவர்களுக்கு பயந்து போலீசில் புகார் கொடுக்காமல் இருந்ததாகவும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு ரவுடிகள் இருவரும் தொடர்ந்து பணம் பெற்று வந்துள்ளனர் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    மேலும் தப்பி ஓடிய கொலையாளிகளான ரௌடிகளை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....