சில நாட்கள் முன்பு வரை ஏதோ கொஞ்சம் போராடினால், நடுத்தர மக்கள் தங்க நகைகளை கொஞ்சம் வாங்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது. இன்றோ அப்படி ஒரு நிலை இருந்ததற்கான அடையாளம் ஏதுமின்றி காணப்படுகிறது, தங்கத்தின் விலை!
உக்ரைன் நாட்டில் நிலவும் பிரச்சினைகள், சர்வதேச சந்தையின் நிலை, மக்களின் வாங்கும் திறன் போன்ற காரணிகள் தங்கத்தின் விலையை ஏற்றமடைய செய்ததாக கூறுகின்றனர், பொருளாதார வல்லுநர்கள்! மேலும், இந்த ஏற்றமானது வருங் காலங்களில் தொடரும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால், மக்கள் சற்றே பதட்டமடைந்து உள்ளனர்.
சென்னையில் இன்று, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 4,710 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 37,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் நேற்றைய விலையை விட இன்று சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்திருக்கிறது.
ஒரு கிராம் தூயத் தங்கம் 5,138 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூயத் தங்கம் 41,104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தூயத் தங்கம் நேற்றைய விலையை விட இன்று சவரனுக்கு 424 ரூபாய் அதிகரித்து காணப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி 68 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 68,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி நேற்றைய விலையை விட கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்துள்ளது.