பிக்பாஸ் புகழ் அமீரின் காதலை தான் ஏற்றதாக பாவ்னி தனது இன்ஸ்டாகிராம் பகுதியில் தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் நிகழும் நிகழ்ச்சிகள் எல்லாம் எளிதாக எளிமையான மக்களை சென்றடைந்து விடுகின்றன. அந்த வகையில், பிக்பாஸ் எனும் நிகழ்ச்சி பட்டித்தொட்டியெல்லாம் சென்று சேர்ந்தது பலருக்கும் தெரிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த பிக்பாஸ் சீசனில் பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் என்றால் அது அமீர் மற்றும் பாவ்னிதான்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றிருக்கும் போதே அமீர் தன் சகப்போட்டியாளரான பாவ்னியிடம் தன் காதலை அவ்வபோது நேரிடையாகவும் மறைமுகமாகவும் தெரிவித்த வண்ணம் இருந்தார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமீர் பாவ்னிக்கு முத்தம் கொடுத்த நிகழ்வு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
இதைத்தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியிலேயே ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பாவ்னி கலந்துக்கொண்டனர். கடந்த சில மாதங்களாக நீடித்த இந்த நிகழ்ச்சி நேற்று இறுதிக்கட்டத்தை எட்டியது. இந்த நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பாவ்னி வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்ஸ்டாகிராம் பதிவில் விஜய் தொலைக்காட்சி மற்றும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், தொகுப்பாளர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், இன்ஸ்டா பதிவில் அமிர் குறித்து பாவ்னி குறிப்பிட்டுள்ளதாவது, ’’ நடனம் எனக்கு மிக சவாலான விஷயம். அதுவும் போட்டி நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வது என்பது பயம் அளிக்கக்கூடிய ஒன்று. ஆனால், நீங்கள் ஒரு சிறந்த மாஸ்டர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்.
நடனமாடத் தெரியாதவரை நடனமாட வைத்து வெற்றிபெறச் செய்வது எப்படி என உங்களுக்கு தெரியும். இந்த பயணத்தில் ஒவ்வொரு தருணத்தையும் வாழ்க்கை முழுவதும் நினைவில் கொள்வேன். உங்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொண்டேன். உங்களிடம் நிறைய கற்றுக்கொண்டேன்.
மேலும், நீங்கள் மனதளவில் மிக அழகான மனிதர். நீங்கள் சிறந்த மாஸ்டர், சிறந்த நடனக் கலைஞர், சிறந்த நண்பர். இப்பொழுது வாழ்க்கை பயணத்தை ஒன்றாக துவங்கலாமா? என் வாழ்க்கைத் துணையாக இருங்கள். எப்பொழுதும் நீங்கள் எனக்காகத்தான். நான் உங்களைக் காதலிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பாவ்னியின் இந்த இன்ஸ்டா பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.