Tuesday, March 19, 2024
மேலும்
    Homeஅறிவியல்காவிரிக் கரைக்கு வந்த அழகிய நீர்நாய்கள் - கண்டுகளித்த மக்கள்!

    காவிரிக் கரைக்கு வந்த அழகிய நீர்நாய்கள் – கண்டுகளித்த மக்கள்!

    பல ஆண்டுகளுக்கு பின்னர் காவிரிக் கரையில் நீர்நாய்கள் வருவதை பார்த்து முக்கொம்பு மக்கள் மகிழ்ச்சியில் திகைத்துள்ளனர்.

    ஒரு கால கட்டத்தில் நீர்நாய்கள் காவிரிக் கரையோரம் அதிக அளவில் வாழ்ந்து வந்தன. இதற்கு முன் மிகவும் செழிமையாக இருந்த காவேரி நீர் நிலைகளில் இருக்கும் மீன்களை பிடித்து உண்பதற்காக நீர்நாய்கள் அதிகளவில் இங்கு நிறைத்திருக்கும்.

    Otter ஆனால், இப்பொழுது நம்முடைய குழந்தைப் பருவங்களில் கண்ட வானிலையும், நம்முடைய சுற்றுச்சூழலும் தற்போது இல்லை. பல மரங்கள் வெட்டப்படுவதினால் காடுகளின் பரப்பு குறைந்து போனது. இதனால், உலக வெப்பமயமாதல் வேகமாக அதிகரித்து வருகிறது.

    இப்படியான, சூழலில் அழிவு நிலையில் இருக்கும் விலங்குகள் நம்முடைய பார்வைக்கு கிடைத்தால்? மனம் மகிழ்ச்சி அடைவதோடு அதனை இனிமேலாவது பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் தோன்றும். அந்தவகையில், காவிரி ஆற்றங்கரையோரம் நீர்நாய்கள் மீண்டும் மக்களின் பார்வையில் பட்டிருப்பது ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

    Otter

    கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சி முக்கொம்பு அருகே, பட்டாம்பூச்சி பூங்காவிற்கு செல்லும் வழியில் கடற்கரை ஓரமாக 4 ஆண் நீர் நாய்கள், 3 பெண் நீர் நாய்கள் V வடிவில் நீருக்குள் சென்று மீன்களை வேட்டையாட காத்திருந்தன. பிஷப் ஹெர்பர் கல்லூரி இயற்கை ஆய்வு குழுவினர் ஆரம்பத்தில் காகங்கள் என்று நினைத்து அதனை கடக்க முயன்றனர். பின்னர், தான் தெரியவந்தது நீர்நாய்கள் என்று.

    நன்னீர் விலங்கான நீர்நாய்கள் ஒரு காலத்தில் காவிரிக் கரையோரம் அதிக அளவில் வாழ்ந்து வந்தன. மீன்களின் எண்ணிக்கையை குறைப்பதில் பெரும் பங்களிப்பை கொண்டு உணவு சங்கிலியில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தன. ஆனால், நீர் நிலைகள் மாசடைதல், சுருங்குதல் மற்றும் மனித செயல்பாடுகளின் தாக்கத்தால் நீர்நாய்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    otter

    சமீப காலங்களில் காவிரி நீர்ப்படுகை பரப்பு சுருங்கி வரும் நிலையிலும் மற்றும் நீர் வரத்து குறைவு காரணமாக இந்த விலங்குகளை காவிரி ஆற்றங்கரையோரம் காண்பது மிகவும் அரிதான நிகழ்வாக மாறியது. இந்த, நீர்நாயின் தோலுக்காக வேட்டையாடப்படும் நிகழ்வுகளும் அதிகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    உலகில் மொத்தம் 13 வகையான நீர்நாய்கள் உள்ளது. அதில், இந்தியாவில் மட்டும் ஸ்மூத் கோட்டட் ஓட்டர், யூராசியன் ஓட்டர், மற்றும் ஸ்மால் கால்வ்ட் ஓட்டர் போன்ற மூன்று வகையான நீர் நாய்கள் உள்ளனர்.

    இவை, நன்னீர் பகுதிகளில் சதுப்பு நிலங்கள், ஈர நிலங்கள், ஆறுகள், குளங்கள் மற்றும் நெல் வயல்களில் நீர் நாய்கள் அதிகமாக காணப்படும். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் சிவப்பு பட்டியலில் அழிய வாய்ப்புள்ள விலங்குகளாக இந்த நீர்நாய்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....