Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்மக்களை வஞ்சித்து துரோகம் செய்த திமுக அரசு; ஆதாரத்துடன் சாடிய ஓபிஎஸ்!

    மக்களை வஞ்சித்து துரோகம் செய்த திமுக அரசு; ஆதாரத்துடன் சாடிய ஓபிஎஸ்!

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை ஏதோ ஒரு வணிக நிறுவனத்தின் ஆண்டு வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்படுவது போல் உள்ளதே தவிர, தமிழ்நாட்டு மக்களின் நலன்களை காக்கும் அறிக்கையாக, மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் அறிக்கையாக, ஏழையெளிய மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அறிக்கையாக இல்லை. இந்த நிதிநிலை அறிக்கை, தி.மு.க. அரசு மக்களுக்கு எவ்வளவு துரோகம் செய்திருக்கிறது என்பதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காண்பித்திருக்கிறது என்று கூறி தனது அறிக்கையை ஆரம்பித்தார், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் .

    தேர்தல் வாக்குறுதிகள் 

    தி.மு.க.வின் முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளான பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு, மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை, கல்விக் கட்டணம் ரத்து, பொது விநியோகத் திட்டத்தின் மூலம் உளுந்தம் பருப்பு மற்றும் கூடுதல் சர்க்கரை வழங்குவது, அரசு ஊழியர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், அரசுத் துறைகள் மற்றும் கல்வி நிலையங்களில் காலியிடங்களை நிரப்புதல் உள்ளிட்டவை குறித்து நிதிநிலை அறிக்கையில் ஏதும் தெரிவிக்கப்படாதது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல் என்றும் ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

    தம்பட்டம் அடிக்கும் திமுக 

    தி.மு.க.வின் முக்கிய வாக்குறுதியான மகளிருக்கான உரிமைத் தொகை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தி இருப்பதாகவும், இதைப் பெறத் தகுதியுடையவர்கள் யார், யார் என்பதை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகவும், இதன் அடிப்படையில் இந்த அரசு எடுத்துவரும் பல்வேறு முயற்சிகளின் காரணமாக நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படும்போது இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது. இதிலிருந்து, மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் என்பது இப்போதைக்கு செயல்படுத்தப்படாது என்பது தெளிவாகிறது என்று தெரிவித்த ஓ.பன்னீர் செல்வம், மாநில நிதிநிலை மேம்பட்டாலும், நகைக்கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை செயல்படுத்தியதுபோல் ஒரு சிலருக்கு மட்டும் அளித்துவிட்டு, தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு விட்டதாக தம்பட்டம் அடிக்கப்படும் என்பதும் தெள்ளத் தெளிவாகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

    மாநிலக் கல்விக் கொள்கை 

    “சென்ற ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில், “தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்றை இந்த அரசு நியமிக்கும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் கடந்த நிலையில், குழு அமைக்கப்பட்டதாகக் கூடத் தெரியவில்லை. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அதுபற்றி ஏதும் குறிப்பிடப்படப்படவே இல்லை. ஒருவேளை, மாநில கல்விக் கொள்கையை மறந்துவிட்டதோ அரசு என்று மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

    சென்ற ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில், வேளாண்மை மற்றும் வீட்டிற்கான இலவச மின்சாரம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இழப்புகளுக்கு நிதி வழங்கவும் ஒதுக்கப்பட்ட நிதியும்
    மருத்துவம் மற்றும் குடும்ப நலத் துறைக்காக சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியும் இம்முறை குறைக்கப்பட்டுள்ளது” என்ற நிலையையும் அவர் தனது அறிக்கையில் எடுத்துரைத்துள்ளார்.

    ஏமாற்றமளிக்கும் நிதிநிலை அறிக்கை 

    முதியோர் உதவித் தொகைக்கு 4,816 கோடி ரூபாயினை ஒதுக்கியிருக்கும் தமிழ்நாடு அரசு, தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியான முதியோர் உதவித் தொகை 1,500 ஆக உயர்த்தப்படும் என்பது குறித்து வாய் திறக்காதது சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகளிடையே பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். அறிக்கையின் முடிவில், இந்த நிதிநிலை அறிக்கை இலக்கற்றும், ‘எதிர்காலம் குறித்த எந்த தீர்க்கமான பார்வையும் இல்லாமல் இருக்கிறது என்றும் மக்கள் நலனுக்கு என்று இந்த நிதிநிலை அறிக்கையில் ஏதுமில்லை என்றும் கூறிய ஓ.பன்னீர் செல்வம், மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை ஓர் ஏமாற்றமளிக்கும் அறிக்கை என்றார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....