தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவித்தது முதல் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு வேட்டை நடத்தி வருகின்றனர். திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளன.
தமிழகத்தில் சென்னை,சேலம், கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளன. இந்த வாக்குகளை எண்ணப்பட்டு வரும் 22ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன.
வழக்கமாக தேர்தல் நடைபெறும் போதெல்லாம் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற, அரசு ஊழியர்கள் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் நாளில் அவர்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, தமிழகத்தில், வரும் 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக பொது விடுமுறை அளிக்கப்படலாம் என்றும் தலைமை செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டும் வருகின்ற 19ம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய நாள் அவர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை என தெரிய வருகிறது. இதேபோல தனியார் நிறுவன ஊழியர்களுக்கும், சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என தெரிய வருகிறது. மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை விடுமுறை அளிக்கப்படலாம் எனத்கூறப்படுகிறது. வரும் நாட்களில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.