தான் செய்த சபதம் நிறைவேறியதை அடுத்து 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவர் தனது தாடியை எடுத்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் ராம சங்கர் குப்தா. இவர் ஆர்.டி ஓ அலுவலராக பணியாற்றி வருகிறார். சிர்மிரி-பாரத்பூர் பகுதிகளை சேர்த்து சத்தீஸ்கர் மாநிலத்தின் 32 வது மாவட்டமாக அறிவிக்கும் வரை தாடியை வெட்டவே மாட்டேன் என்ற சபதம் மேற்கொண்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து, 21 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப்பகுதிகள் இணைக்கப்பட்டு 32 வது மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, ராம் சங்கர் குப்தா, அவர் செய்த சபதம் நிறைவேறியதை அடுத்த மகிழ்ச்சியில் தாடியை எடுத்துள்ளார்.
சிர்மிரி-பாரத்பூர் பகுதிகளை இணைத்து மாவட்டமாக மாற்ற கடந்த ஆண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போதே ராம சங்கர் குப்தா தனது தாடியை எடுத்து விட்டார். ஆனால், பணிகள் தொடங்கப்படாத நிலையில் மீண்டும் அவர் தாடி வளர்க்க ஆரம்பித்தார்.
இந்நிலையில், பணிகள் தொடங்கப்பட்டதை அடுத்த ஒரு வருடம் கழித்து தனது தாடியை மீண்டும் எடுத்துள்ளார். இது குறித்து அவர், ‘சிர்மிரி-பாரத்பூர் இணைத்து மாவட்டமாக அறிவிக்கப்படவில்லை என்றால், நான் வாழ்நாள் முழுவதும் தாடி வளர்த்திருப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.
காதலில் தோல்வி அடைந்தால் தாடி வளர்ப்பவர்கள் மத்தியில், தனது சபதத்திற்காக தாடி வளர்த்துள்ளார் ராம சங்கர் குப்தா.