Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்பாடலுடன், 'இரட்டை வேடம் போடும் திமுக' என விமர்சித்த ஓபிஎஸ்! - முழுத்தகவல் உள்ளே!

    பாடலுடன், ‘இரட்டை வேடம் போடும் திமுக’ என விமர்சித்த ஓபிஎஸ்! – முழுத்தகவல் உள்ளே!

    தன்னலத்திற்காக மத்திய இளநிலை கல்விக் கழக அங்கீகாரம் பெற்ற பள்ளிகளை துவக்குவது அல்லது அதனை விலைக்கு வாங்குவது, ஆங்கிலப் பெயர்களை வியாபார நிறுவனங்களுக்கு வைப்பது, பிற மாநிலங்களில் வியாபார நிறுவனங்களை துவக்குவது என்ற வரிசையில் தற்போது மாண்புமிகு முதலமைச்சரை பிரபலப்படுத்துவதற்காக இந்தி மொழியை தி.மு.க. அரசு பயன்படுத்தி வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 

    மேற்கூறியவற்றை குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், தான், தனது, தமக்கு என்று இல்லாமல் தமிழ், தமிழ்நாடு, தமிழினம் என, இமைப்பொழுதும் சோர்வின்றி உழைத்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள், ஆனால், அதற்கு நேர்மாறான சூழ்நிலை தமிழ்நாட்டில் இன்று நிலவுகிறது என்று தெரிவித்தார். 

    அண்மையில், மாண்புமிகு மத்திய உள் துறை அமைச்சர் அவர்கள், நாடாளுமன்ற ஆட்சி மொழிக் குழுத் தலைவர் என்ற முறையில் ஆட்சி மொழிக் கூட்டத்தில் பேசியபோது, ‘ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தி மொழியைப் பயன்படுத்துங்கள்’ என்று கூறியதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்ததை ஓபிஎஸ் குறிப்பிட்டார். 

    மேலும், இதற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்” என்று வீராவேசத்துடன் விமர்சித்தார் என்றும் தெரிவித்தார்.

    தடம் மாறுகிறாரா மு.க.ஸ்டாலின்? 

    அதேசமயம், இன்றோ  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தன்னுடைய அறிவிப்புகளை இந்தி மொழியில் வெளியிடுவதை குறிப்பிட்டவர்,  தன்னலம் என்றவுடன் தடம் மாறுகிறார் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார், ஓபிஎஸ். 

    “தமிழ் மொழியை வளர்ப்பது என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும், குறிப்பாக பிறமொழி பேசுபவர்களை தமிழ்க் கற்றுக் கொள்ள வழிவகை செய்வது, பிற மாநிலங்களில் உள்ள மக்கள் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, பிற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ்த் துறையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பது, தமிழுக்கான இருக்கைகளை தோற்றுவிப்பது, உலக நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை தோற்றுவிப்பது போன்றவைதான் ” என பன்னீர் செல்வம் அவர்கள் தெரிவித்தார். 

    அதே சமயம், தமிழ் மொழியை வளர்க்க வேண்டிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அதைச் செய்யாமல், தன்னை வளர்த்துக் கொள்ளும் பணியில், தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்ளும் பணியில், இந்தி மொழியை வளர்ப்பதாக தகவல்கள் வருவதாகவும், மு.க. ஸ்டாலின் அவர்களை தேசியத் தலைவராக பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், குறிப்பாக வட மாநிலங்களில் அவர் புகழ் பரவ வேண்டும் என்பதற்காக சில நடவடிக்கைகள் தி.மு.க.வால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வருவதாக அவர் தெரிவித்தார். 

    இதன் முதல் கட்டமாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகள் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு செய்தி – மக்கள் தொடர்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டு தொல்லியல் துறை இணையதளத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பத்திரிகையில் செய்தி ஒன்று வந்துள்ளதையும், இந்தி மொழியில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு ஒன்று பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளதையும் ஓபிஎஸ் சுட்டிக்காட்டினார். 

    “ஒரு பக்கம் இந்தித் திணிப்பு என்று கூறி தமிழுக்கு போராடுவது போல் நடிப்பது, மறுபக்கம் இந்தியில் தி.மு.க. தலைவரை விளம்பரப்படுத்துவது என இரட்டை . வேடம் போடுகிறது தி.மு.க. தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு பேரறிஞர் அண்ணா கூறிய இருமொழிக் கொள்கையில் ஒன்றான ஆங்கிலத்தை பயன்படுத்துவதற்குப் பதில் ஏன் மும்மொழிக் கொள்கையில் ஒன்றான இந்தியை தி.மு.க. தலைவர் பயன்படுத்துகிறார் என்று மக்கள் கேட்க ஆரம்பித்து இருக்கிறார்கள். ஒருவேளை ஊருக்கு தான் உபதேசம் போலும்!” என்றும் கடிந்தார், ஓபிஎஸ்!

    எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ..

    தி.மு.க. அரசின் இந்த இரட்டை வேடத்திற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்த அவர், தி.மு.க.வின் இந்தச் செயலைப் பார்க்கும்போது, “பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி, பாமர மக்களை வலையினில் மாட்டி, இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, நம் நாட்டிலே” என்ற புரட்சித் தலைவரின் பாடல் வரிகள் தான் என் நினைவிற்கு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். 

    தி.மு.க.வின் செயல்பாடுகளைக் கண்டு மக்கள் பெருத்த ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர் என்பதையும் இந்த ஏமாற்றம், வருங்காலத்தில் தமிழ்நாட்டில் மிகப் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமரமர வழிவகுக்கும் என்பதையும் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் தெரிவித்தார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....