கைபேசியில் அழைப்பவர் பெயர் என்னவென்று அறிய டிராய் புதிய திட்டத்தை கையிலெடுத்துள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு முறை ஒழுங்காணையம் (டிராய்) புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி,கைபேசிக்கு அழைக்கும் நபரின் பெயர் திரையில் தெரியும். இத்திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த திட்டம் நடைமுறையில் அமல்படுத்தப்படும்போது, கைபேசியில் அழைப்பவரின் பெயர் இல்லாவிட்டாலும், அழைப்பவர்களின் பெயர் தெரியுமாறு திட்டம் செய்யப்பட்டுள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.
சிம் கார்டை வாங்கும்போது, பயனர்களிடம் இருந்து பெறப்படும் கேஓய்சி தகவல்களின் அடிப்படையில் கைபேசி அழைப்புகளின் போது பெயர் திரையில் தெரியப்படுத்தப்படும். இதற்கான உத்தரவை அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டுள்ளது.
இயல்பாக, கைபேசியில் அழைப்பவர் பெயர் என்னவென்று அறிய ‘ட்ரூ காலர்’ போன்ற செயலிகள் உபயோகப்படுத்தப்பட்டுவருகின்றன. டிராய் சொல்லும் இத்திட்டம் நடைமுறைக்கு வருமாயின் இதுபோன்ற செயலிகளுக்கு அவசியம் இருக்காது.
இதையும் படிங்க: கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு; அரசு அறிவித்த நிவாரணம்..நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு